Skip to main content

இருள் மறைத்த நிழல் (தேனு) - Full Novel

  

Subscribe to the Audio Novels on YouTube Channel Thenulagam

Feb 14th 2010 - The Author Speaks

உங்களுக்கு ரமணிசந்திரன் நாவல்கள் பிடிக்குமானால் நிச்சயமாக இந்த கதையும் பிடிக்கும். Just in time, for the Valentines Day! ரமணிசந்திரன் அம்மாவின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.  எனக்கு பிடித்த எழுத்தாளர்கள் பட்டியல் சுஜாதா, சிவசங்கரி, லக்ஷ்மி, பாலகுமாரன், கல்கி, அகிலன், ராஜேஷ்குமார், அனுராதாரமணன் என வளர்ந்து கொண்டே போகும். அது முடிவற்றது. ஆனால் ஒரு காலகட்டத்தில் எனது ஆர்வம் ரமணிசந்திரன் நாவல்களில் நங்கூரமிட்டுவிட்டது.  

எல்லாம் சரி... இப்படிப்பட்ட தீவிர வாசகி திடீரென்று எப்படி ஒரு அமெச்சூர் எழுத்தாளரானாளாம்? அது ஒரு எதிர்பாராத திருப்பம். 

என்னிடம் ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் நூல் வடிவில் உள்ளன. படித்து முடித்த கதைகள் தான் என்றாலும் மீண்டும் மீண்டும் அவற்றை படிப்பதை கண்ட என் கணவர் என் அமைதியற்ற தன்மையைப் பார்த்து சிரித்தார்.

"அதான் ரமணிசந்திரன் கதைகள் எல்லாம் ஒரு வகையான  கட்டமைப்புலே இருக்கும்னு சொல்றியே..   அதே கட்டமைப்பு உனக்கு பிடிச்சபடி நீயே ஒரு கதையை எழுதி நீயே படிச்சிக்கோ.

அப்படியே உன்னோட Blog-யும் வெளியிட்டால,  உன்னை போன்ற Crazy பொண்ணுங்களும் படிச்சிக்குவாங்க." என்று கேலி செய்தார். 

(I know, I know.. நம்மை போன்ற RC fans கணவர் மீது வேண்டுமானால் crazy-ஆக இருப்போம். வேறு எந்த வகையிலும் crazy இல்லை. பாவம், அறியாத பையன்.. தெரியாத சொல்லிட்டாரு.... அவரை விட்டுடுங்க.  He is  such a darling. ;-) )

அவர் விளையாட்டாக சொல்லி இருந்தாலும், அவர் சொல்லியது போல எழுதினால் தான் என்ன என்கிற எண்ணம் துளிர் விட்டது. விளைவு? விளையாட்டு வினை ஆனது.  இதோ எனது முதல் நெடுங்கதை.

என்னை இன்றளவும் ஊக்குவிக்கும் என் அன்பான, அழகான, பண்பான கணவருக்கும், என் மீது ஒரு குடும்பம் போல அன்பு பாராட்டும் என் வாசக சொந்தங்களுக்கும் இந்த கதையை சமர்ப்பிக்கிறேன். 


Click here:


Comments