இரவின் தனிமையில் எவ்வளவோ யோசித்தும் ஒரே ஒப்பற்ற விடை தான் கிடைத்தது. நெஞ்சில் நீக்கமற நிறைந்துவிட்டான் நளந்தன் என்பதே அது!
ஆனால் அவன் மனம்? அது பூட்டிய கோட்டை என்று தெரிந்தும் ஏன் உள் செல்ல முனைந்தாள்?
அவளுக்கு ஏற்பட்ட தாக்கத்தில் பத்தில் ஒரு பங்கேனும் அவனுக்குள் ஏற்பட்டிருக்குமா?
கண்ணில் தெரியும் ரசனை, 'Beautiful', 'Wonderful' என்ற ஒற்றை வரிப் பாராட்டு, இவை எல்லாம் அவளுக்குத் தான் பெரிய விஷயம்.. இதழ் ஒற்றுவதும், இடை அணைப்பதும் இயல்பாய் செய்பவனுக்கு?!
கண்ணில் தெரியும் ரசனை, 'Beautiful', 'Wonderful' என்ற ஒற்றை வரிப் பாராட்டு, இவை எல்லாம் அவளுக்குத் தான் பெரிய விஷயம்.. இதழ் ஒற்றுவதும், இடை அணைப்பதும் இயல்பாய் செய்பவனுக்கு?!
கன்னத்தில் செல்லமாக தட்டியதும், கூந்தலை ஒதுக்கி விட்டதும், அவனது ஆழ் குரலும்.. தன்னை இப்படி தலை சுற்றிப போக வைக்கிறதே.. இதெல்லாம் அவன் சொன்ன 'சகஜமாக பழகுவேன்' பாணியா? அப்படியானால், 'தெரியாதவர்களுக்கு சொல்லி பிரயோஜனம் இல்லை' என்றதன் அர்த்தம் தான் என்ன? சுபலாவை என்னோடு அவ்வளவு நெருக்கமாக பார்த்தும் இப்படி கேட்கிறாயே என்கிறானா? அல்லது நளந்தன் நூற்றில் ஒரு வாய்ப்பாக தன்னை காதலிக்கிறானா? அப்படியா என்று கேட்டு, அவன் இல்லை என்றானானால் எவ்வளவு தலையிறக்கம்!
கெட்டதில் ஒரு நல்லதாக, தன்னிடம் கண்ணியமாக நடந்து கொள்கிறான், சில சமயம் ஏன்.. பல சமயம் திருவிழாவில் பெற்றோரைத் தொலைத்த குழந்தையிடம் கரிசனம் காட்டுவது போல கனிவாய் நடந்து கொள்கிறான். அதற்குமேல் எதுவும் இருப்பதாக தெரியவில்லையே..
ஒருவேளை நிஜமாகவே அவள் போக்கிடம் இல்லாத அநாதை என்பதாக நினைத்துத் தான் அத்தனைக் கனிவும், கரிசனமுமா?! பாவம் ஏழைப் பெண் என்று தணிவாக அவன் பேசுவது அவளுக்கு கண்ட கற்பனையையும் விளைவித்து விட்டதா?! தாத்தாவைத் தவிர வேறு ஆணின் கனிவும் கவனிப்பும் கண்டிராத அவளின் பேதை மனம் அவனிடம் தலைக் குப்புற விழுந்துவிட்டதா?
ஒருவேளை நிஜமாகவே அவள் போக்கிடம் இல்லாத அநாதை என்பதாக நினைத்துத் தான் அத்தனைக் கனிவும், கரிசனமுமா?! பாவம் ஏழைப் பெண் என்று தணிவாக அவன் பேசுவது அவளுக்கு கண்ட கற்பனையையும் விளைவித்து விட்டதா?! தாத்தாவைத் தவிர வேறு ஆணின் கனிவும் கவனிப்பும் கண்டிராத அவளின் பேதை மனம் அவனிடம் தலைக் குப்புற விழுந்துவிட்டதா?
இந்த காதல் கைகூடுமா?! அவள் காதலிக்கும் நளந்தன், எவளிடமோ காதலா, காமமா, கவர்ச்சியா என்று கூட தெரியாமல் மயங்கிக் கிடப்பவன். கல்யாணம் என்பது பெரும் கமிட்மென்ட் என்பவன். காதலில் நம்பிக்கை இல்லை என்றவன்.
அப்படியே நளந்தனுக்கு காதலில் நம்பிக்கை வந்தாலும், அதனால் அவள் நிலையில் என்ன பெரிய மாற்றம் நிகழ்ந்து விடக் கூடும்? காதலா கவர்ச்சியா என்பதை உணர்த்தத்தான் எவளோ இருப்பதாக சொன்னானே! அந்த எவளோ தான் சுபலாவா? சுபலா அப்படித்தானே சொல்கிறாள்..
அவள் இனி என்ன செய்வாள்?!
செரீனாவையும், சுபலாவையும் மெளனமாக சகிக்க வேண்டியதுதானா? அவளே இழுத்துப் போட்டுக் கொண்டது தானே! தன் நம்பிக்கை, கொள்கை - அது கோணலாக இருந்த போதும் ஒளிவு மறைவின்றி நளந்தன் சொன்னான் தானே! அதன் பிறகும் கண்ணையும் கருத்தையும் காதல் என்று காற்றில் பறக்க விட்டுவி ட்டு அவனை குற்றம் சொல்லி என்ன பயன்?!
அப்படியானால் அவள் கதி தான் என்ன?!
ஒரு தலை காதலில் உருகி உருகி உருக்குலைவது தானா?! அதுதான் அவளுக்கு விதிக்கப்பட்ட விதி. அவன் மனதில் தனக்கு இடமில்லை என்றானால் இந்த காதலை துறக்க முடியுமா?! வாழ்க்கை என்ன பேருந்து நிலையமா? இந்த பஸ்ஸில் இடம் இல்லையென்றால் அடுத்த பஸ்ஸில் ஏறிப் போவதற்கு?! எது எப்படியானாலும், கல்யாணம் என்று ஒன்று தனக்கு நடந்தால் அது நளந்தனோடு தான். ஆனால் அதற்கும் வழியில்லையே!
தன் காதலை கூட அவனிடம் வெளிபடுத்த முடியாதே. அவனிடம் எதிரொலியே இல்லாத போது அவளாக எப்படி சொல்வாள்? சொன்னாலும் அவள் நேசத்தின் ஆழம் அவனுக்கு புரியுமா? அந்த செரீனா போல அவனது பணத்திற்கும், புகலிடத்திற்கும் பேராசைப் பட்டு அவனோடு இழைவதாக நினைத்துவிட்டான் என்றால்?! அந்த அவமானத்தை எப்படி தாங்குவாள் அவள்?
அதை விட இப்படி தனிமையில் கண்ணீர் வடித்து தனிமரமாகவே நின்று விடலாமே.
தனக்கே தெரியாமல் வந்த இந்த காதல், தனக்கு மட்டுமே தெரிந்ததாக விட்டுவிடுவதே நல்லது.
தாங்க மாட்டாத பாரம் ஏறினார் போல வலித்த தலையை இரு கைகளாலும் பி டித்துக் கொண்டு மேஜை மேல் தொய்ந்தாள் மிதுனா. துக்கம் தொண்டையை அடைத்தது.
தாய் தந்தையை இழந்த போது தவித்த அதே தவிப்பு. இப்போதும் இழந்து விட்டாள் தான். தன் மனதை.. தன் வாழ்வின் ஆதார சுருதியான நளந்தனோடு இணையக்கூடும் என்ற நம்பிக்கையை!
நளந்தனிடம் தன் மனதை வெளிபடுத்தி அவமானப்படுவதை விட, இங்கிருக்கும் நாள் வரை தன் மனதைக் காட்டிக்கொள்ளாது, தாத்தா வந்தவுடன், கௌரவத்தோடு நளந்தனை விட்டு முடிந்த தூரம் விலகிச் சென்றுவிட வேண்டும்.
ஆமாம். விலகிவிட வேண்டும்! ஏதோ இந்த மட்டும், அவளிடம் அவனுக்கு ஒரு நன்மதிப்பிருக்கிறது. தாத்தாவே சொன்னாரே..சுகுணாவிற்கு பிறகு நீ தான்..உன்னிடத்தில் தான் என்று..
அதையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
நளந்தன் மீதான தன் நேசத்தை எவரும் அறியாமல் பொத்தி வைக்க வேண்டும். தன்னிடமிருந்தே தன் காதலை பொத்தி வைத்தவள் ஆயிற்றே! இது அவளால் முடியாததா என்ன?! மிதுனா தன் கண்ணில் வழிந்த நீரை ஆத்திரமாக சுண்டி எறிந்தாள்.
நளந்தன் மீதான தன் நேசத்தை எவரும் அறியாமல் பொத்தி வைக்க வேண்டும். தன்னிடமிருந்தே தன் காதலை பொத்தி வைத்தவள் ஆயிற்றே! இது அவளால் முடியாததா என்ன?! மிதுனா தன் கண்ணில் வழிந்த நீரை ஆத்திரமாக சுண்டி எறிந்தாள்.
தன்னைப் பற்றிய கண்டுபிடிப்பிற்குப் பின், முக வாட்டத்தை முயன்று மறைத்தாலும், அவனோடு இயல்பாக பேச கொள்ள முடியவில்லை. அவன் தானே என்றோ, யாரோ என்றோ இருக்க முடியவில்லை. எப்படி முடியும்?!அருகிலிருப்பவன், அங்கு மட்டும் அல்லாமல் அவளின் எண்ணமெங்கும் பரவி, அங்கிங்கெனாதபடி, இதயத்தின் இண்டு இடுக்கெல்லாம் நிறைந்திருப்பவன் ஆயிற்றே! யாரோ என்று இருக்க எப்படி முடியும்?! முதல் பார்வையிலேயே கொள்ளை போனவள்! பொருந்தா காதல், ஒரு தலைக் காதல், எதிர்காலமில்லாத காதல் என்று எந்த வகையில் எடுத்துச் சொன்னாலும் கேட்காத மனதை வைத்துக் கொண்டு அவள் என்ன தான் செய்வாள், பாவம்?!
நளந்தனைக் கண்டால் உண்டாகும் பரவசம் அவன் கண் மறைந்ததும், காற்றில் கரைந்த கற்பூரமாய் தன்மை மாறி பரிதவிப்பானது! கண்ணில் படாதது கருத்தில் படாது என்பார்களே.. கருத்தில் இருந்து கரைய மாட்டாதவன் நளந்தன் என்றாலும், அவனை கண்ணால் பார்ப்பதால் உண்டா கும் தவிப்பேனும் குறையக்கூடுமே. அவன் கண்ணில் படாது, அவனைக் கண்ணில் பாராது இருந்து பார்க்க முயன்றாள் மிதுனா.
//தன்னைப் பற்றிய கண்டுபிடிப்பிற்குப் பின், முக வாட்டத்தை முயன்று மறைத்தாலும், அவனோடு இயல்பாக பேச கொள்ள முடியவில்லை. அவன் தானே என்றோ, யாரோ என்றோ இருக்க முடியவில்லை. எப்படி முடியும்?!அருகிலிருப்பவன், அங்கு மட்டும் அல்லாமல் அவளின் எண்ணமெங்கும் பரவி, அங்கிங்கெனாதபடி, இதயத்தின் இண்டு இடுக்கெல்லாம் நிறைந்திருப்பவன் ஆயிற்றே! யாரோ என்று இருக்க எப்படி முடியும்?! முதல் பார்வையிலேயே கொள்ளை போனவள்! பொருந்தா காதல், ஒரு தலைக் காதல், எதிர்காலமில்லாத காதல் என்று எந்த வகையில் எடுத்துச் சொன்னாலும் கேட்காத மனதை வைத்துக் கொண்டு அவள் என்ன தான் செய்வாள், பாவம்?!//
ReplyDeleteமிக அருமையான வரிகள் .,காதலை இப்படி கூட மனதில் வைத்து அலச முடியுமா
அதுவும் எண்ணமெங்கும் பரவி, அங்கிங்கெனாதபடி, இதயத்தின் இண்டு இடுக்கெல்லாம் நிறைந்திருப்பது என்று சுட்டி கட்டிய விதமும்
பாராட்டுகுரியது.
//நளந்தனைக் கண்டால் உண்டாகும் பரவசம் அவன் கண் மறைந்ததும், காற்றில் கரைந்த கற்பூரமாய் தன்மை மாறி பரிதவிப்பானது! கண்ணில் படாதது கருத்தில் படாது என்பார்களே.. கருத்தில் இருந்து கரைய மாட்டாதவன் நளந்தன் என்றாலும், அவனை கண்ணால் பார்ப்பதால் உண்டாகும் தவிப்பேனும் குறையக்கூடுமே. அவன் கண்ணில் படாது, அவனைக் கண்ணில் பாராது இருந்து பார்க்க முயன்றாள் மிதுனா.//
ReplyDeleteஆஹா! மிதுவின் மனதில் ஏற்பட்ட காதல்; அதனால் அவளுக்கு ஏற்பட்ட சிந்தனைகள்;அது ஏற்படுத்தி கொடுத்த தீர்மானம்
அதை செயல் படுத்த மிது கொண்ட முடிவு .....................
நம்மையும் தான் வசீகரிக்க வைக்கிறது .,கதையோடு ஒன்றி போகவும் வைக்கிறது
பதிவுக்கு நன்றி தேனு
Thena,
ReplyDeletereally impressed.ungalin ezhunthin nadai ennai rombeve paathithu vithatu.
can you send me the story in PDF format as i would like to share with friends Malaysia. please send to pbarath@maxis.com.my or sletchmy@gmail.com
i in love with Nalanthan...
Many thanks,
Barathy