இருள் மறைத்த நிழல் (தேனு) - 25
பேசிக் கொண்டே வந்ததாலோ, வானம் இருட்டியிருந்ததாலோ அந்தப் பெண்ணை அவர்கள் கவனிக்கவில்லை. அவர்களைப் பிடிக்க அவள் ஓடித்தான் வந்திருக்கவேண்டும். நடையில் ஒரு அவசரத்துடன் மிதுனாவைத் தாண்டி, நளந்தனைத் தோள் தொட்டுத் திருப்பிய அந்தப் பெண் வெகு இயல்பாக அவனை ஒரு தரம் அணைத்தாள். கட்டியணைத்தது பத்தாதென்று, அவன் கன்னத்தில் ஒரு முத்தம் வேறு பதித்தாள்! மேல்மட்டத்தில் இதெல்லாம் சகஜம் போலும்.
ஆகாயத்தில் உயரப் பரந்த விமானம் திடுதிப்பென்று தரையில் மோதியது போன்று உணர்ந்தாள் மிதுனா.
"என்ன விஜ்ஜி, ஒரு மாதமாக ஆளையேக் காணோம்?! உங்களைப் பிடிக்கவே முடியவில்லையே! நல்லவேளை இன்று உங்களைப் பார்த்தேன்" என்று மிளிற்றியவள், "உங்களால் தான் இப்படி மாட்டிக் கொண்டேன், விஜ்ஜி" என்று புதிர் போட்டாள்.
அவனால் மாட்டிக் கொண்டாளாமா? அவளை அங்கு வர சொல்லிவிட்டு வர சொன்னதை மறந்துவிட்டானோ?! நளந்தனை மிதுனா பார்க்க, அவனோ அதே குழப்பத்தோடு அந்த பெண்ணைப் பார்த்தான்.
"என்னாலா?!"
"ஆமாம்! நீங்கள் தானே அன்று வீட்டிற்கு வந்த போது என் உடையைப் பார்த்து 'Breathtaking' என்றீர்கள்?! அதே மாடலில் வேறு நிறத்தில் இன்னும் ஒரு உடை எடுக்க வந்தேன். இப்படி மழையில் மாட்டிக் கொள்ளவிருந்தேன். நல்லவேளை விஜ்ஜி, உங்களைப் பார்த்தேன்" என்றாள்.
வேண்டுமென்றே மிதுனாவை அலட்சியப்படுத்தினார் போல ஒரு பாவனை அவளிடம். அருகிலிருப்பவளிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதை விட, நளந்தனிடம் தனக்கிருக்கும் உரிமையை அல்லது அன்னியோன்யத்தை பறைசாற்றவே அவள் விரும்பினாள் போல இருந்தது அவளது பேச்சும் பாவனையும்.
வார்த்தைக்கு வார்த்தை விஜ்ஜி, பஜ்ஜி என்று..ஒன்றும் சகிக்கவில்லை மிதுனாவுக்கு. பேச்சுக்கிடையே அவளைப் பார்த்து ஒரு மௌனச் சீறல் வேறு! நளந்தனோடு இவள் காரில் வருவது பிடிக்கவில்லையோ?!
"என்ன விஜ்ஜி? தாத்தாவைப் பார்த்துக் கூட ஒரு மாதமாகிவிட்டது..என்னை இன்று கூட்டிப் போகிறீர்களா?" என்று கேட்டபடி அவன் பதிலுக்குக் காத்திராமல், அவனை சுற்றிக் கொண்டு வந்து, முன்புறம் 'Passenger' பக்கத்து கதவைத் திறந்துவிட்டாள் அந்த பெண்.
அதற்குமேல் வேண்டாம் என்று எப்படி சொல்வான் நளந்தன்? அல்லது அவனுக்குமே அவளை வீட்டுக்கு கூட்டி செல்வதில் விருப்பமோ என்னவோ?! பிடிக்காத நாடகத்தில் பங்கேற்க வேண்டிய கட்டாயம் மிதுனாவுக்கு.
மிதுனாவிடம் பின்புற சீட்டைக் காட்டி, ஏறிக் கொள் என்று கையசைவிலேயே காட்டினான் நளந்தன். கணநேரத்தில் தான் பின்னுக்கு தள்ளப்பட்டது ஒரு மாதிரி சுணக்கமாக இருந்தது. அந்தப் பெண் யாரென்று மிதுனாவிற்கு அறிமுகப்படுத்த நளந்தனுக்கு மனமில்லையோ அல்லது அந்த பெண் அவகாசம் தரவில்லையோ..எதுவானாலும், எது பற்றியும் தெரிந்துகொள்ள எள்ளளவும் அவளுக்கு உரிமை இல்லை என்பது மட்டும் தெள்ளத்தெளிவு!
கால்களை நீட்ட ஏதுவாய் நளந்தன் தன் சீட்டை நன்றாக பின்னுக்குத் தள்ளி அமர்வது வழக்கம். அவனுக்கு நேர் பின்னால் அவள் உட்கார முனைய, அவளைத் தொட்டுத் தடுத்து, "அந்த பக்கம் ஏறிக் கொள், கால் இடிக்கும்" என்று சொன்னது தவிர வேறெதுவும் அவளிடம் அவன் பேசவில்லை.
இதிலெல்லாம் மகா அக்கறை தான்! மறுபேச்சின்றி ஏறிக் கொண்ட மிதுனா வீடு எப்போதடா வரும் என்று பல்லைக் கடித்துக் கொண்டு காத்திருந்தாள். அந்த கொஞ்சு புறாவோ 'விஜ்ஜி' விஜ்ஜி' என்று அவன் மேலேயே படுத்துக் கொள்வாள் போல ஒட்டி உரசி ஏதோ வளவளத்துக் கொண்டிருந்தாள்.
அவர்கள் பேசியது எதுவும் மிதுனாவின் மனதை எட்டவே இல்லை. மனமெல்லாம் யாரிவள் என்பதிலேயே நின்றது. தாத்தாவைக் கூட தெரியும் என்றால்.. குடும்ப நண்பர்கள் என்பது போலா? இவளிடம் தான் நளந்தன் காதலா இல்லையா என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறானா? தாத்தா கூட சொன்னாரே..யாரோ ஒருத்தியிடம் சலனம் என்று..அந்த 'யாரோ' ஒருத்தி இவள் தானா? 'Breathtaking' என்றானாமே?!
தன்னை 'Beautiful', 'Wonderful' என்றெல்லாம் ஒற்றை வார்த்தையில் அவன் மெச்சியதில் உச்சி குளிர்ந்ததை எண்ணி உடல் கூசியது.
மனதின் ஒரு மூலையில் சின்னதாக ஒரு வலி. ஒரு ஏமாற்றம். ஏன்?! அவனது சலனம் பற்றி தாத்தாவும், ஏன் அவனே சொல்லியும் அவள் அறிவாள் தானே?! வேறு என்ன எதிர்பார்க்கிறாள்?! ஒருவேளை 'அப்படி இருக்கலாம்' என்று தாத்தாவும், நளந்தனும் கூறியது மாறி இன்று 'அப்படித் தான் ' என்று ஆதாரம் ஒன்று அவள் எதிரில் உட்கார்ந்து எக்களிக்கிறதே , அது ஏற்படுத்திய வலியா?! ஆதாரம்! அப்படித்தான் என்பதற்கு என்ன ஆதாரம்? நிமிர்ந்து உட்கார்ந்தாள் மிதுனா.
என்ன ஆதாரம்? அந்தப் பெண்ணாக வந்தாள். அவளாக அணைத்தாள். அவளாக முத்தமிட்டாள். அவளாக காரில் ஏறிக் கொண்டாள். இதோ அவளாக அவனிடத்தில் கொஞ்சிக் கொஞ்சி பிதற்றுகிறாள். இதில் என் நந்தனின் பங்கு எங்கே? இண்டு இடுக்கில் வெளிச்சம் தேடி புறப்பட்ட மனது அந்த 'என் நந்தன்'-ல் திகைத்து விழித்தது.
'என் நந்தனா?!' நளந்தன் நந்தனாகிவிட்டானே.. இவனிடம் இருந்து விலகி இருக்க முடிவு செய்ததென்ன..இப்போது..இவ்வளவிற்கு பின்னும் அவனை என் நந்தன் என்று தலையில் தூக்கி வைத்துக் கூத்தாடுவதென்ன?! கொஞ்ச நஞ்சம் மீதமிருந்த புத்தியைத் திரட்டி விஸ்வரூபம் எடுத்து மிரட்டிய மனதை தட்டி வைத்தாள்.
சொன்னவுடன் கேட்பதா மனித மனம்?! "அவளாகத்தான் எல்லாம் செய்தாலும், உன் நந்தன் இதில் எதையும் வேண்டாம் என்று மறுக்கவில்லையே?! தகராறு செய்தது. எண்ண ஓட்டத்தை தடுப்பவள் போல, நெற்றிப் பொட்டில் கைவைத்து அழுத்திக் கொண்டாள் மிதுனா.
நந்தன்..நளந்தன், அவனே சொன்னது போல இது அவன் வாழ்வு. அவன் விருப்பம். அவன் விருப்பம் கொஞ்சி குலவும் அந்த பெண்ணிடம் என்றால் அதை பற்றி அவளுக்கென்ன? என்று தனக்குள் பலமுறை சொல்லிக் கொண்டபின் தான் மனம் கொஞ்சமேனும் அமைதியுற்றது.
இவளது மனப் போராட்டங்களை எவரும் அறியவில்லை. கொஞ்சு புறாவிற்கோ கொஞ்சவே நேரம் போதவில்லை!
அமைதியாக வந்தது நளந்தனும் மிதுனாவும் தான்.
ஆகாயத்தில் உயரப் பரந்த விமானம் திடுதிப்பென்று தரையில் மோதியது போன்று உணர்ந்தாள் மிதுனா.
"என்ன விஜ்ஜி, ஒரு மாதமாக ஆளையேக் காணோம்?! உங்களைப் பிடிக்கவே முடியவில்லையே! நல்லவேளை இன்று உங்களைப் பார்த்தேன்" என்று மிளிற்றியவள், "உங்களால் தான் இப்படி மாட்டிக் கொண்டேன், விஜ்ஜி" என்று புதிர் போட்டாள்.
அவனால் மாட்டிக் கொண்டாளாமா? அவளை அங்கு வர சொல்லிவிட்டு வர சொன்னதை மறந்துவிட்டானோ?! நளந்தனை மிதுனா பார்க்க, அவனோ அதே குழப்பத்தோடு அந்த பெண்ணைப் பார்த்தான்.
"என்னாலா?!"
"ஆமாம்! நீங்கள் தானே அன்று வீட்டிற்கு வந்த போது என் உடையைப் பார்த்து 'Breathtaking' என்றீர்கள்?! அதே மாடலில் வேறு நிறத்தில் இன்னும் ஒரு உடை எடுக்க வந்தேன். இப்படி மழையில் மாட்டிக் கொள்ளவிருந்தேன். நல்லவேளை விஜ்ஜி, உங்களைப் பார்த்தேன்" என்றாள்.
வேண்டுமென்றே மிதுனாவை அலட்சியப்படுத்தினார் போல ஒரு பாவனை அவளிடம். அருகிலிருப்பவளிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதை விட, நளந்தனிடம் தனக்கிருக்கும் உரிமையை அல்லது அன்னியோன்யத்தை பறைசாற்றவே அவள் விரும்பினாள் போல இருந்தது அவளது பேச்சும் பாவனையும்.
வார்த்தைக்கு வார்த்தை விஜ்ஜி, பஜ்ஜி என்று..ஒன்றும் சகிக்கவில்லை மிதுனாவுக்கு. பேச்சுக்கிடையே அவளைப் பார்த்து ஒரு மௌனச் சீறல் வேறு! நளந்தனோடு இவள் காரில் வருவது பிடிக்கவில்லையோ?!
"என்ன விஜ்ஜி? தாத்தாவைப் பார்த்துக் கூட ஒரு மாதமாகிவிட்டது..என்னை இன்று கூட்டிப் போகிறீர்களா?" என்று கேட்டபடி அவன் பதிலுக்குக் காத்திராமல், அவனை சுற்றிக் கொண்டு வந்து, முன்புறம் 'Passenger' பக்கத்து கதவைத் திறந்துவிட்டாள் அந்த பெண்.
அதற்குமேல் வேண்டாம் என்று எப்படி சொல்வான் நளந்தன்? அல்லது அவனுக்குமே அவளை வீட்டுக்கு கூட்டி செல்வதில் விருப்பமோ என்னவோ?! பிடிக்காத நாடகத்தில் பங்கேற்க வேண்டிய கட்டாயம் மிதுனாவுக்கு.
மிதுனாவிடம் பின்புற சீட்டைக் காட்டி, ஏறிக் கொள் என்று கையசைவிலேயே காட்டினான் நளந்தன். கணநேரத்தில் தான் பின்னுக்கு தள்ளப்பட்டது ஒரு மாதிரி சுணக்கமாக இருந்தது. அந்தப் பெண் யாரென்று மிதுனாவிற்கு அறிமுகப்படுத்த நளந்தனுக்கு மனமில்லையோ அல்லது அந்த பெண் அவகாசம் தரவில்லையோ..எதுவானாலும், எது பற்றியும் தெரிந்துகொள்ள எள்ளளவும் அவளுக்கு உரிமை இல்லை என்பது மட்டும் தெள்ளத்தெளிவு!
கால்களை நீட்ட ஏதுவாய் நளந்தன் தன் சீட்டை நன்றாக பின்னுக்குத் தள்ளி அமர்வது வழக்கம். அவனுக்கு நேர் பின்னால் அவள் உட்கார முனைய, அவளைத் தொட்டுத் தடுத்து, "அந்த பக்கம் ஏறிக் கொள், கால் இடிக்கும்" என்று சொன்னது தவிர வேறெதுவும் அவளிடம் அவன் பேசவில்லை.
இதிலெல்லாம் மகா அக்கறை தான்! மறுபேச்சின்றி ஏறிக் கொண்ட மிதுனா வீடு எப்போதடா வரும் என்று பல்லைக் கடித்துக் கொண்டு காத்திருந்தாள். அந்த கொஞ்சு புறாவோ 'விஜ்ஜி' விஜ்ஜி' என்று அவன் மேலேயே படுத்துக் கொள்வாள் போல ஒட்டி உரசி ஏதோ வளவளத்துக் கொண்டிருந்தாள்.
அவர்கள் பேசியது எதுவும் மிதுனாவின் மனதை எட்டவே இல்லை. மனமெல்லாம் யாரிவள் என்பதிலேயே நின்றது. தாத்தாவைக் கூட தெரியும் என்றால்.. குடும்ப நண்பர்கள் என்பது போலா? இவளிடம் தான் நளந்தன் காதலா இல்லையா என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறானா? தாத்தா கூட சொன்னாரே..யாரோ ஒருத்தியிடம் சலனம் என்று..அந்த 'யாரோ' ஒருத்தி இவள் தானா? 'Breathtaking' என்றானாமே?!
தன்னை 'Beautiful', 'Wonderful' என்றெல்லாம் ஒற்றை வார்த்தையில் அவன் மெச்சியதில் உச்சி குளிர்ந்ததை எண்ணி உடல் கூசியது.
மனதின் ஒரு மூலையில் சின்னதாக ஒரு வலி. ஒரு ஏமாற்றம். ஏன்?! அவனது சலனம் பற்றி தாத்தாவும், ஏன் அவனே சொல்லியும் அவள் அறிவாள் தானே?! வேறு என்ன எதிர்பார்க்கிறாள்?! ஒருவேளை 'அப்படி இருக்கலாம்' என்று தாத்தாவும், நளந்தனும் கூறியது மாறி இன்று 'அப்படித் தான் ' என்று ஆதாரம் ஒன்று அவள் எதிரில் உட்கார்ந்து எக்களிக்கிறதே , அது ஏற்படுத்திய வலியா?! ஆதாரம்! அப்படித்தான் என்பதற்கு என்ன ஆதாரம்? நிமிர்ந்து உட்கார்ந்தாள் மிதுனா.
என்ன ஆதாரம்? அந்தப் பெண்ணாக வந்தாள். அவளாக அணைத்தாள். அவளாக முத்தமிட்டாள். அவளாக காரில் ஏறிக் கொண்டாள். இதோ அவளாக அவனிடத்தில் கொஞ்சிக் கொஞ்சி பிதற்றுகிறாள். இதில் என் நந்தனின் பங்கு எங்கே? இண்டு இடுக்கில் வெளிச்சம் தேடி புறப்பட்ட மனது அந்த 'என் நந்தன்'-ல் திகைத்து விழித்தது.
'என் நந்தனா?!' நளந்தன் நந்தனாகிவிட்டானே.. இவனிடம் இருந்து விலகி இருக்க முடிவு செய்ததென்ன..இப்போது..இவ்வளவிற்கு பின்னும் அவனை என் நந்தன் என்று தலையில் தூக்கி வைத்துக் கூத்தாடுவதென்ன?! கொஞ்ச நஞ்சம் மீதமிருந்த புத்தியைத் திரட்டி விஸ்வரூபம் எடுத்து மிரட்டிய மனதை தட்டி வைத்தாள்.
சொன்னவுடன் கேட்பதா மனித மனம்?! "அவளாகத்தான் எல்லாம் செய்தாலும், உன் நந்தன் இதில் எதையும் வேண்டாம் என்று மறுக்கவில்லையே?! தகராறு செய்தது. எண்ண ஓட்டத்தை தடுப்பவள் போல, நெற்றிப் பொட்டில் கைவைத்து அழுத்திக் கொண்டாள் மிதுனா.
நந்தன்..நளந்தன், அவனே சொன்னது போல இது அவன் வாழ்வு. அவன் விருப்பம். அவன் விருப்பம் கொஞ்சி குலவும் அந்த பெண்ணிடம் என்றால் அதை பற்றி அவளுக்கென்ன? என்று தனக்குள் பலமுறை சொல்லிக் கொண்டபின் தான் மனம் கொஞ்சமேனும் அமைதியுற்றது.
இவளது மனப் போராட்டங்களை எவரும் அறியவில்லை. கொஞ்சு புறாவிற்கோ கொஞ்சவே நேரம் போதவில்லை!
அமைதியாக வந்தது நளந்தனும் மிதுனாவும் தான்.
pavampa midhu
ReplyDeleteVanthuta naduvula nanthi maathiri....chea
ReplyDeleteNice story
ReplyDelete