இருள் மறைத்த நிழல் (தேனு) - 4
இந்த சுந்தரம் தாத்தாவும், தன் பாட்டனை போன்றே சேலையே உன்னதம் என்று நினைப்பவராக இருந்து விட்டால்? வரும் போது சேலையில் தான் வந்திருந்தாள். வந்தவுடன் வேலைபற்றி வேறு பேச வேண்டுமே..சேலையில் கொஞ்சம் பெரிய பெண்ணாய் பொறுப்பாய் தெரிவோமே என்று ஒரு எண்ணம். இப்போது ஏதோ நினைப்பில் சுடிதார் அணிந்து..கீழே இருந்த பெரியவர் மனம் கோணாமல் நடந்துகொள்ள வேண்டும். ஏற்கெனவே அவர் பேரனிடம் நல்ல சுமுகம் இல்லை.. வேண்டாம்..சேலையே கட்டிக்கொள்வோம் என மிதுனா தீர்மானித்தாள்.
கையில் இருந்த சுடிதாரை அணியாமல், துவட்டிய டவலையே உடலுக்கு குறுக்காக சுற்றிக்கொண்டு பாத்ரூமிலிருந்து வெளியே வந்தவள், கட்டில் மேல் திறந்திருந்த தன் suitcase-ல் மேலாக கிடந்த ஒரு சேலையையும், அதற்குண்டான பாவாடை, சட்டையையும் எடுத்து அணிய முற்பட்டாள். சேலைக்கு முன் கொசுவம் வைத்துக்கொண்டிருந்த போது, சற்றும் எதிர்பாராதவிதமாக கதவு திறந்துக்கொண்டது. ஒரு சின்ன அலறலுடன் கொசுவத்தை தவறவிட்டு பின் தரையில் கிடந்த முந்தானையை கொத்தாக அள்ளி அவசரமாய் தன் மேல் போட்டுக்கொண்டவள், அங்கே அதே திடுக்கிடலுடன் அவன் - அவளிடம் அப்படி சிடுசிடுத்தவன் நிற்பதை கண்டதும், அவனுக்கு முதுகு காட்டி திரும்பிக்கொண்டு, "என்ன? என்ன வேண்டும்?" என்று தன் முறையாய் குரலின் நடுக்கத்தை மறைத்துக்கொண்டு சிடுசிடுத்தாள்.
அவளை அந்த கோலத்தில் கண்டதும் சற்று தடுமாறிய அவனும் கணநேரத்தில் தன்னை சமாளித்துக்கொண்டான். பார்வையில் தென்பட்ட பிரமிப்பை மறைத்துக்கொண்டு, "சே!" என்று அவளுக்கு எதிர் புறமாக திரும்பி தலையை கோதிக்கொண்டே,
"கதவைத் தட்ட தான் தெரியாது! உடை மாற்றும்போது, கதவைத் தாளிட வேண்டும் என்று கூடவா தெரியாது?!" என அவளையே குற்றம் சாட்டினான்!
அவனது இந்த அநியாய குற்றச்சாட்டில் அதிர்ந்து போனாள் மிதுனா. Auto lock கதவு என்று நினைத்தாளே?! அவனுக்கு எதிர்புறம் திரும்பிகொண்டே, முந்தானையை சரியாக தன் மேல் சரித்துக்கொண்டவள், அவனுக்கு இணையான கோபத்துடன், "நீங்கள் தான் எல்லா 'basic manners'-ம் தெரிந்தவர் ஆயிற்றே! கதவை தட்டி விட்டு வருவதற்கென்ன?!" என்று பதிலடி கொடுக்க முனைகையில், அவனோ அதற்குள், "முத்து முட்டாள்!" என்றபடியே இரண்டிரண்டு படிகளாய் தாவி கீழிறங்கிவிட்டிருந்தான். சாத்திய கதவைத் தட்டாமல் இவன் அநாகரீகமாய் திறந்ததற்கு முத்து எப்படி முட்டாளாவான்? யார் மீதாவது வீண் பழி போடுவதே இவன் வழக்கமா?!
அவன் தயவில் அவன் வீட்டில் வாழ வேண்டிய தன் நிலை மீது கோபம் மிக, வேகமாக கதவை சாத்தினாள் மிதுனா. எல்லா கூத்திற்கும் காரணமான கதவு சரியாக lock-ஆகாததை அப்போதுதான் கவனித்தாள். "சே!" இதைக் கூட கவனிக்காமல் புது இடத்தில் சாவகாசமாக உடை மாற்றிக்கொண்டு..அவன் கோபத்திலும் ஒரு நியாயம் இருப்பது இந்த நேரத்தில் புரிவது அநியாயமாகப்பட்டது அவளுக்கு. நல்லவேளை சற்று தாமதமாக வந்தான். ஒரு ஓரிரு நிமிடங்கள் முன்னதாக வந்திருந்தான் என்றால்...சீசீ..அவன் முகத்தை எப்படி பார்ப்பாள் அவள்!
அவனைக் காண விருப்பமில்லாமல், ஜன்னலையும் சாத்த முற்படுகையில், கீழே முத்துவும் அவனும் பேசுவது கேட்டது. "பெரியய்யா தானுங்க மேல ஏற்பாடு செய்ய சொன்னாரு. நீங்க கூட அவர கேட்டு செய்ய சொன்னீங்களே..அதான் சின்னய்யா.." என்று பவ்யமாக விளக்கம் கூறிக்கொண்டு இருந்தான்.
ஓ அது தான் முத்துவின் குழப்பத்திற்கு காரணமோ?! இந்த சின்ன எஜமான் கீழறை என்று சொல்ல, பெரிய எஜமான் ஏற்கெனவே மேலறை என்று சொல்லிருப்பார். இந்த அறையில் அவள் இருப்பது தெரியாமல் இந்த கடுவன் பூனையும் கதவை டக்-கென திறந்துவிட்டான் போலும்.. இந்த லட்சணத்தில் தான் வேறு "என்னைச் சொன்னீர்களே, நீங்களாவது கதவைத் தட்டிவிட்டு வந்திருக்கலாமே? " என்று தர்க்கம் செய்யத் துணிந்தாளே! நல்லவேளை அதற்குள் அவன் அங்கிருந்து முத்துவைத் தேடி அகன்றுவிட, மேலும் மூக்குடையாமல் தப்பித்தாள்!
இந்த கலாட்டா எல்லாம் ஓயட்டும் என்று ஒரு அரை மணி நேரம் காத்திருந்தாள் மிதுனா. பசி வயிற்றைக் கிள்ளியது. கீழே அவனிருப்பானோ என்றும் கூச்சமாக இருந்தது. கணநேரமானாலும் அவன் பார்வையில் தென்பட்ட மாறுதலை அவள் கவனித்துவிட்டிருந்தாளே!
கீழே எதுவும் பேச்சுக் குரல் கேட்கவில்லை என்று உறுதிபடுத்திக்கொண்ட பின் மெல்ல தாத்தாவின் அறைக்கு சென்றாள்.
how u got the names like nalandhan
ReplyDelete:) Wanting to keep an unique name, I had to squeeze my brain to come up with this name. (Wish I did this when I were to name my son.. oh well.. my husband would not have budged.. LOL.. that is a different story))
ReplyDeleteI am yet to meet anyone named nalanthan except for our Nala Maharaja in Hindu Mythology. LOL. So do you know any other Nalanthan?
By the way, Mithuna is a made up name from my imagination..
ReplyDeleteya my name is nalandhan
ReplyDeletereally?! WOW.. nice name I should say. :) moreover, I am surprised to have a male reader here. Usually RC type stories are popular among girls. Pleasant surprise indeed.
ReplyDeleteI like the way of narrating the story you did.,
ReplyDeleteAs you know thenu that most of the RC novels she was creating the hero is polite and nice.,
this is the one of the success of her stories also .,this is my persional opinion .,thanx for sharingpa
Thanx for the post dear