இருள் மறைத்த நிழல் (தேனு) - 32
சுபலாவின் பேச்சும் பாவனையும் என்னவோ முரண்பட்டது. வெகு நேரம் யோசித்தபின் தான் யாரோ பத்ரியை பார்க்க போவதாக தானே நளந்தன் சொன்னான்.. அதே பத்ரி மதியம் வந்ததால் மனம் விட்டு பேச முடியவில்லை என்றாளே இந்த சுபலா.. நளந்தன் பிசினஸ் மீட்டிங் என்றானே.. இவள் வழக்கமாக சந்திக்கும் கிளப் என்றாளே.. சும்மாவானும் மிதுனாவை குழப்ப சுபலா உளறி இருப்பாளா? என்று சந்தேகம் வலுத்தது.
நளந்தனின் மனதில் நிஜமாகவே சுபலா இருக்கிறாளா? அவனையே கேட்டால் என்ன? நீ யாரைக் காதலிக்கிறாய் என்று? இரவு தூக்கம் பிடிக்கவில்லை அவளுக்கு. மெல்ல எழுந்து பால்கனியில் சிறிது நேரம் காற்றாட நிற்கலாமே என்று போனாள். ஊத காற்று சில்லென்று வீச அதுவும் முடியாது போனது. நளந்தனைப் பாராது, அவனிடம் வெளிப்படையாக அந்த கேள்வியைக் கேளாது முடியாது போலிருந்தது.
அறை வாயிலில் சிறிது நேரம் நின்று பார்த்தாள். எப்போது வருவான்? வந்தாலும் அந்நேரம் அவளிடம் நின்று பேசுவானா? ஒரு தவிப்புடன் கட்டிலில் அமர்ந்தாள். சிறிது நேரத்தில் அவன் வரும் ஓசை கேட்டது. அவள் அறையைத் தாண்டிதான் நளந்தன் அறை. படியேறும் போதே அவள் அறை திறந்துகிடப்பதை அவன் கவனித்திருக்க வேண்டும்.
தன் அறைக்கு செல்லாமல் அவளை நோக்கி வந்தான். பார்ட்டிக்கு சென்று ஆடி களித்து, வந்தவன் போல இல்லை அவன் தோற்றம். மடிப்பு கலையாத பான்ட். கைச்சட்டையை மட்டும் முழங்கை வரை மடித்து விட்டிருந்தான். டையை ஒரு கையால் தளர்த்திக்
கொண்டே "தூங்கவில்லை?" என்று மெய்யான அக்கரையில் கேட்டான்.
நிஜமாகவே வெறும் பிசினஸ் பேச்சு பேசத்தான் சென்றிருந்தானா? கொஞ்சம் களைத்து கூட இருந்தான். அவன் களைப்பு மனதைத் தொட, "அசதியாக இருக்கிறீர்களே..நான் காபி ஏதாவது எடுத்து வரவா?" சோர்வாக தெரிந்த அவன் முகத்தில், அவனைக் கேட்க விருந்த கேள்வி மறந்து போனது.
தலையசைத்து மறுத்து, "எல்லாம் இங்கேயே போட்டுக் கொள்ளலாம். நீயும் களைப்பாகத்தான் இருக்கிறாய். என்னோடு வா" என்று அவன் அறைக்கு சென்றான்,
இந்த இரவில் அவன் அறைக்கா? யாரேனும் பார்த்தால்? பாராவிடிலும் அது முறையா?
அவள் சஞ்சலத்தைக் கண்ணில் படித்த நளந்தன், "அந்த மாதிரி தவறாக நினைக்கும் சின்னத்தனம் இங்கு எவருக்கும் இல்லை. சும்மா வா" என்று அவளையும் கண்டித்து தன் அறைக்கு சென்றான். ஏனோ அவன் குரலில் மறுபேச்சின்றி பணிந்து தொடர்ந்தாள் மிதுனா.
முன் ஒரு தினம் அவன் அறையில் அவனை சந்தித்தது நினைவிற்கு வந்தது. அவனுக்கும் அதே நினைவோ? ஒரு சின்ன சிரிப்போடு அவளைப் பார்த்தவன், "டையை மட்டும் கழற்றிக்கொள்ள அனுமதி உண்டா?" என்று கிண்டலாக வினவினான்.
அப்படித்தான் அவள் அனுமதி கேட்டு எல்லாம் செய்கிறானாக்கும்! அதுவரை மறந்திருந்த கேள்வி மண்டையில் குதித்து தொண்டைக்குள் துடித்தது.
கேட்கலாமா? சுமுகமாக மனநிலையில் இருக்கிறான்..இப்போதே கேட்கலாமா? அல்லது..இந்த சூழ்நிலையை ஏன் கெடுத்துக் கொள்ளவேண்டும்..பிறகு கேட்கலாமா? ..ஏன் கேட்க வேண்டும்..தெரிகிறபோது தெரியட்டுமே..ச்சே! இதுஎன்ன வேதனை..
அவள் தடுமாற்றத்தை ஓரக்கண்ணில் கவனித்தபடி, அறையில் இருந்த மைக்ரோவேவில் இரு கப்பில் தண்ணீர் சுட வைத்தவன், "கிரீன் டீ.. சாப்பிடுவாயல்லவா?" என்று கேட்டு, அவற்றுள் ரெண்டு கிரீன் டீ பாக்கட்டுகளை மூழ்கவிட்டான்.
ஒரு நிமிடம் கழித்து கொஞ்சம் தேன் கலந்து அவள் கையில் டீ கப்பைத் திணித்தவன்,
"பரவாயில்லை, கேட்டு விடு" என்றான்.
"என்ன?..என்ன கேட்பது?" என்று அவள் திகைக்க,
"அதுதான் இவ்வளவு நேரம் எதையோ கேட்பதா வேண்டாமா என்று மனதுக்குள் ஒரு பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறாயே..பரவாயில்லை கேட்டு விடு"
கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு இலகுவாக மேஜைமேல் சாயந்து மென்முறுவல் பூத்தான்.
"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.." முகம் சிவக்க மறுத்தாள் மிதுனா.
"ஒன்றுமேயில்லையா?!"
"கேட்க ஒன்றுமில்லை" என்றாள் பட்டென்று. இப்படி மனதைப் படித்துவிட்டானே!
"ம்ம்..குறைந்தபட்சம், பரம்பரா பார்கிங் லாட்டில் 'உங்களிடம் ஒன்று கேட்க வேண்டுமே' என்று ஏதோ கேட்க வந்தாயே..அந்த கேள்விக்குக் கூடவா பதில் வேண்டாம்?" டீயை உறிஞ்சியபடி கேலியாகவே கேட்டான் நளந்தன்.
ஆமாம்..கேட்க நினைத்தாள் தான்..அவன் மனதை அறிந்துகொள்ளும் வேகத்தோடு ஏதேதோ கேட்க நினைத்தாள் தான்..அதற்குள் நல்லவேளையோ, கெட்டவேளையோ அந்த சுபலா வந்து இடையிட்டாள்.
இப்போது கேட்க நினைத்ததும் கிட்டத்தட்ட பரம்பராவில் இருந்து கிளம்பும் போது கேட்க நினைத்த கேள்வி தான். அவன் மனதில் யார் என்று..
அவளையே பார்த்தபடி நிதானமாக டீயை சுவைத்துக் கொண்டிருந்தான் நளந்தன்.
கேட்காமல் விடமாட்டான் போல ஒரு பிடிவாதத்துடன்.
ஒரு மூச்செடுத்து தன்னை அமைதிபடுத்திய மிதுனா கேட்கவந்ததை சுற்றி வளைத்துக் கேட்டாள்.
"நீங்கள்..யாரிடமோ காதலா என்று தெரியவில்லை .. என்றீர்களே..அது அதை..காதலா என்று தெரிந்துவிட்டதா?" அவள் தடுமாற்றத்தை ரசித்த நளந்தன் குறுக்கிட்டான். "காதலா, காமமா, கவர்ச்சியா என்று தெரியவில்லை என்றேன்"
அதை மறுபடியும் சொல்ல வேறு வேண்டுமா? நாகரீகமாக காதலா என்பதோடு நிறுத்திக் கொள்ளபார்த்தால்..முகம் கன்றினாள் மிதுனா.
அவளை ரசனையாக பார்த்த நளந்தன், "இந்த கேள்விக்கு கட்டாயம் விடை தெரிய வேண்டுமா?" என்றான்.
"ஆமாம்" என்றாள் மிதுனா அன்றுவரை அறிந்திராத ஒரு உணர்வோடு.
பார்வை மாறாமல் "ஏன்?" என்றான் நளந்தன்.
"தெ.. தெரியவில்லை"
"தெரிந்தவர்களுக்கு சொல்லத் தேவையில்லை. தெரியாதவர்களுக்கு சொல்லி பிரயோஜனம் இல்லை" தோளைக் குலுக்கினான் நளந்தன் .
மறுபடியும் திருக்குறள் பாடிவிட்டானா என்றிருந்தது மிதுனாவுக்கு.
ஆயாசையோடு, "நேரமாகிறது.. நான் போகிறேன்" என்று சொல்லி எழுந்தாள்.
கதவை சாத்த வந்தது போல அவள் பின்னோடு வந்தவன் ஆழ் குரலில், "மிதுனா" என்றழைத்து, அவள் நெற்றியில் விழுந்த கூந்தல் சுருளை மென்மையாக விலக்கி, "ஸ்வீட் ட்ரீம்ஸ்" என்றான்.
அந்த கணம்..அவள் புரியவில்லை தெரியவில்லை என்று, புரிந்து கொள்ள.. தெரிந்து கொள்ள பிரியமின்றி, பயந்து ஒதுக்கி வைத்தது எல்லாம் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது, புரிந்தது!
நளந்தனின் மனதில் நிஜமாகவே சுபலா இருக்கிறாளா? அவனையே கேட்டால் என்ன? நீ யாரைக் காதலிக்கிறாய் என்று? இரவு தூக்கம் பிடிக்கவில்லை அவளுக்கு. மெல்ல எழுந்து பால்கனியில் சிறிது நேரம் காற்றாட நிற்கலாமே என்று போனாள். ஊத காற்று சில்லென்று வீச அதுவும் முடியாது போனது. நளந்தனைப் பாராது, அவனிடம் வெளிப்படையாக அந்த கேள்வியைக் கேளாது முடியாது போலிருந்தது.
அறை வாயிலில் சிறிது நேரம் நின்று பார்த்தாள். எப்போது வருவான்? வந்தாலும் அந்நேரம் அவளிடம் நின்று பேசுவானா? ஒரு தவிப்புடன் கட்டிலில் அமர்ந்தாள். சிறிது நேரத்தில் அவன் வரும் ஓசை கேட்டது. அவள் அறையைத் தாண்டிதான் நளந்தன் அறை. படியேறும் போதே அவள் அறை திறந்துகிடப்பதை அவன் கவனித்திருக்க வேண்டும்.
தன் அறைக்கு செல்லாமல் அவளை நோக்கி வந்தான். பார்ட்டிக்கு சென்று ஆடி களித்து, வந்தவன் போல இல்லை அவன் தோற்றம். மடிப்பு கலையாத பான்ட். கைச்சட்டையை மட்டும் முழங்கை வரை மடித்து விட்டிருந்தான். டையை ஒரு கையால் தளர்த்திக்
கொண்டே "தூங்கவில்லை?" என்று மெய்யான அக்கரையில் கேட்டான்.
நிஜமாகவே வெறும் பிசினஸ் பேச்சு பேசத்தான் சென்றிருந்தானா? கொஞ்சம் களைத்து கூட இருந்தான். அவன் களைப்பு மனதைத் தொட, "அசதியாக இருக்கிறீர்களே..நான் காபி ஏதாவது எடுத்து வரவா?" சோர்வாக தெரிந்த அவன் முகத்தில், அவனைக் கேட்க விருந்த கேள்வி மறந்து போனது.
தலையசைத்து மறுத்து, "எல்லாம் இங்கேயே போட்டுக் கொள்ளலாம். நீயும் களைப்பாகத்தான் இருக்கிறாய். என்னோடு வா" என்று அவன் அறைக்கு சென்றான்,
இந்த இரவில் அவன் அறைக்கா? யாரேனும் பார்த்தால்? பாராவிடிலும் அது முறையா?
அவள் சஞ்சலத்தைக் கண்ணில் படித்த நளந்தன், "அந்த மாதிரி தவறாக நினைக்கும் சின்னத்தனம் இங்கு எவருக்கும் இல்லை. சும்மா வா" என்று அவளையும் கண்டித்து தன் அறைக்கு சென்றான். ஏனோ அவன் குரலில் மறுபேச்சின்றி பணிந்து தொடர்ந்தாள் மிதுனா.
முன் ஒரு தினம் அவன் அறையில் அவனை சந்தித்தது நினைவிற்கு வந்தது. அவனுக்கும் அதே நினைவோ? ஒரு சின்ன சிரிப்போடு அவளைப் பார்த்தவன், "டையை மட்டும் கழற்றிக்கொள்ள அனுமதி உண்டா?" என்று கிண்டலாக வினவினான்.
அப்படித்தான் அவள் அனுமதி கேட்டு எல்லாம் செய்கிறானாக்கும்! அதுவரை மறந்திருந்த கேள்வி மண்டையில் குதித்து தொண்டைக்குள் துடித்தது.
கேட்கலாமா? சுமுகமாக மனநிலையில் இருக்கிறான்..இப்போதே கேட்கலாமா? அல்லது..இந்த சூழ்நிலையை ஏன் கெடுத்துக் கொள்ளவேண்டும்..பிறகு கேட்கலாமா? ..ஏன் கேட்க வேண்டும்..தெரிகிறபோது தெரியட்டுமே..ச்சே! இதுஎன்ன வேதனை..
அவள் தடுமாற்றத்தை ஓரக்கண்ணில் கவனித்தபடி, அறையில் இருந்த மைக்ரோவேவில் இரு கப்பில் தண்ணீர் சுட வைத்தவன், "கிரீன் டீ.. சாப்பிடுவாயல்லவா?" என்று கேட்டு, அவற்றுள் ரெண்டு கிரீன் டீ பாக்கட்டுகளை மூழ்கவிட்டான்.
ஒரு நிமிடம் கழித்து கொஞ்சம் தேன் கலந்து அவள் கையில் டீ கப்பைத் திணித்தவன்,
"பரவாயில்லை, கேட்டு விடு" என்றான்.
"என்ன?..என்ன கேட்பது?" என்று அவள் திகைக்க,
"அதுதான் இவ்வளவு நேரம் எதையோ கேட்பதா வேண்டாமா என்று மனதுக்குள் ஒரு பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறாயே..பரவாயில்லை கேட்டு விடு"
கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு இலகுவாக மேஜைமேல் சாயந்து மென்முறுவல் பூத்தான்.
"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.." முகம் சிவக்க மறுத்தாள் மிதுனா.
"ஒன்றுமேயில்லையா?!"
"கேட்க ஒன்றுமில்லை" என்றாள் பட்டென்று. இப்படி மனதைப் படித்துவிட்டானே!
"ம்ம்..குறைந்தபட்சம், பரம்பரா பார்கிங் லாட்டில் 'உங்களிடம் ஒன்று கேட்க வேண்டுமே' என்று ஏதோ கேட்க வந்தாயே..அந்த கேள்விக்குக் கூடவா பதில் வேண்டாம்?" டீயை உறிஞ்சியபடி கேலியாகவே கேட்டான் நளந்தன்.
ஆமாம்..கேட்க நினைத்தாள் தான்..அவன் மனதை அறிந்துகொள்ளும் வேகத்தோடு ஏதேதோ கேட்க நினைத்தாள் தான்..அதற்குள் நல்லவேளையோ, கெட்டவேளையோ அந்த சுபலா வந்து இடையிட்டாள்.
இப்போது கேட்க நினைத்ததும் கிட்டத்தட்ட பரம்பராவில் இருந்து கிளம்பும் போது கேட்க நினைத்த கேள்வி தான். அவன் மனதில் யார் என்று..
அவளையே பார்த்தபடி நிதானமாக டீயை சுவைத்துக் கொண்டிருந்தான் நளந்தன்.
கேட்காமல் விடமாட்டான் போல ஒரு பிடிவாதத்துடன்.
ஒரு மூச்செடுத்து தன்னை அமைதிபடுத்திய மிதுனா கேட்கவந்ததை சுற்றி வளைத்துக் கேட்டாள்.
"நீங்கள்..யாரிடமோ காதலா என்று தெரியவில்லை .. என்றீர்களே..அது அதை..காதலா என்று தெரிந்துவிட்டதா?" அவள் தடுமாற்றத்தை ரசித்த நளந்தன் குறுக்கிட்டான். "காதலா, காமமா, கவர்ச்சியா என்று தெரியவில்லை என்றேன்"
அதை மறுபடியும் சொல்ல வேறு வேண்டுமா? நாகரீகமாக காதலா என்பதோடு நிறுத்திக் கொள்ளபார்த்தால்..முகம் கன்றினாள் மிதுனா.
அவளை ரசனையாக பார்த்த நளந்தன், "இந்த கேள்விக்கு கட்டாயம் விடை தெரிய வேண்டுமா?" என்றான்.
"ஆமாம்" என்றாள் மிதுனா அன்றுவரை அறிந்திராத ஒரு உணர்வோடு.
பார்வை மாறாமல் "ஏன்?" என்றான் நளந்தன்.
"தெ.. தெரியவில்லை"
"தெரிந்தவர்களுக்கு சொல்லத் தேவையில்லை. தெரியாதவர்களுக்கு சொல்லி பிரயோஜனம் இல்லை" தோளைக் குலுக்கினான் நளந்தன் .
மறுபடியும் திருக்குறள் பாடிவிட்டானா என்றிருந்தது மிதுனாவுக்கு.
ஆயாசையோடு, "நேரமாகிறது.. நான் போகிறேன்" என்று சொல்லி எழுந்தாள்.
கதவை சாத்த வந்தது போல அவள் பின்னோடு வந்தவன் ஆழ் குரலில், "மிதுனா" என்றழைத்து, அவள் நெற்றியில் விழுந்த கூந்தல் சுருளை மென்மையாக விலக்கி, "ஸ்வீட் ட்ரீம்ஸ்" என்றான்.
அந்த கணம்..அவள் புரியவில்லை தெரியவில்லை என்று, புரிந்து கொள்ள.. தெரிந்து கொள்ள பிரியமின்றி, பயந்து ஒதுக்கி வைத்தது எல்லாம் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது, புரிந்தது!
கண்ணை மூடி உலகம் இருண்டுவிட்டதாக பாவித்துக் கொள்ள அவளால் அன்றுவரை பணிக்கப்பட்ட மனது நளந்தனின் ஒரு தொடுகையில் அவள் அனுமதியின்றி விழித்துக் கொண்டது. அவனது அந்த ஒரு ஸ்பரிசம் தந்த சிலிர்ப்பு நளந்தன் மீதான தன் நேசத்தை ஸ்பஷ்டமாகப் பறைசாற்றியது.
தாத்தாவின் பயணம் முடிய மீதமிருக்கும் இரண்டு நீண்ட மாதங்கள், இரண்டே இரண்டு மாதங்களாக சுருங்கி தெரிந்த விந்தை புரிந்தது. அவனது கோணல் வாழ்க்கைக்கு வரிந்துகட்டி வக்காலத்து வாங்கிய வேகம் புரிந்தது. அவன் மனம் கோணாது நடக்கத் துடித்தக் காரணம் புரிந்தது. அவனில்லாத நேரம் வீடு வெறிச்சோடிய விதம் புரிந்தது.அவன் அருகாமை தகித்த நிலை புரிந்தது.
தன்நெஞ்சறிவது பொய்யற்க.. இனியும் தெரியவில்லை, புரியவில்லை என்று எந்த நொண்டி சாக்கின் பின்னும் ஒளிந்து கொள்ள முடியாது என்பதும் புரிந்தது!
இது தான் காதலா?! அவனிடமா? ஆனால் எப்படி? எப்போதிலிருந்து? செரீனா பற்றி ஒளிவு மறைவின்றி அவன் சொன்னதைக் கேட்ட பின்பும் தன்னால் எப்படி அவனிடம்..? அதிலும் காதல், கல்யாணம் பற்றிய அவன் கணிப்பு தெரிந்திருந்தும்! அதற்கும் மேலாக, எவளோ ஒருத்தியிடம் காதலோ கவர்ச்சியோ ஏதோ ஒரு கண்ணராவி என்றவனிடம்?
தாத்தா இல்லாத ஏக்கத்தில் தனக்குத்தான் புத்தி கித்தி பேதலித்துவிட்டதா?!
நண்பன், நல்லவன் அதனால் ஒரு ஈர்ப்பு என்று சொல்லி..அது சரிவராத போது, வெறும் இனக்கவர்ச்சி என்று ஒதுக்கி.. ஆனால்.. இது காதல் தானா?
மனம் ஆடிக் காற்றில் பஞ்செனப் பறந்தது. இந்தத் துன்பத்திற்குப் பயந்து தான் ஆசைகளை ஆராயாது ஆழ் மனதில் அடக்கி வைத்திருந்தாளா?! பாவம்..தன் மேல் அக்கறை கொண்ட நண்பன் அதனால் அவன் மேல் தனக்கும் ஒரு ஈடுபாடு என்று பொய் சமாதானம் சொல்லி, முட்டாளின் சொர்க்கத்தில் சஞ்சரித்தாள். இன்றோ அது மினாமல் முழங்காமல் நழுவி திரிசங்கு சொர்க்கமானதே!
அதற்குமேல் அங்கிருக்க அவளால் முடியவில்லை. "தூக்கம் வருகிறது" என்று வாய்க்குள் முணுமுணுத்துவிட்டு தன் கட்டிலில் வந்து விழுந்தாள்.
கதையின் மிக முக்கியமான கட்டத்தில் இந்த அத்தியாயமும் ஒன்று
ReplyDeleteநிறைய தடவை படித்து ரசித்தேன் .,பதிவுக்கு நன்றி தேனு
//தலையசைத்து மறுத்து, "எல்லாம் இங்கேயே போட்டுக் கொள்ளலாம். நீயும் களைப்பாகத்தான் இருக்கிறாய். என்னோடு வா" என்று அவன் அறைக்கு சென்றான்,
ReplyDeleteஇந்த இரவில் அவன் அறைக்கா? யாரேனும் பார்த்தால்? பாராவிடிலும் அது முறையா?//
மிக சின்ன நிகழ்வுகளை கூட நுணுக்கமாக தெரிவிக்கும் நேர்த்தி அருமை
//அவள் சஞ்சலத்தைக் கண்ணில் படித்த நளந்தன், "அந்த மாதிரி தவறாக நினைக்கும் சின்னத்தனம் இங்கு எவருக்கும் இல்லை. சும்மா வா" என்று அவளையும் கண்டித்து தன் அறைக்கு சென்றான். ஏனோ அவன் குரலில் மறுபேச்சின்றி பணிந்து தொடர்ந்தாள் மிதுனா.
ReplyDeleteமுன் ஒரு தினம் அவன் அறையில் அவனை சந்தித்தது நினைவிற்கு வந்தது. அவனுக்கும் அதே நினைவோ? ஒரு சின்ன சிரிப்போடு அவளைப் பார்த்தவன், "டையை மட்டும் கழற்றிக்கொள்ள அனுமதி உண்டா?" என்று கிண்டலாக வினவினான்.
அப்படித்தான் அவள் அனுமதி கேட்டு எல்லாம் செய்கிறானாக்கும்! அதுவரை மறந்திருந்த கேள்வி மண்டையில் குதித்து தொண்டைக்குள் துடித்தது.//
மிதுவின் மனதை புரிந்து கொள்ள முடிகிறது
//கேட்கலாமா? சுமுகமாக மனநிலையில் இருக்கிறான்..இப்போதே கேட்கலாமா? அல்லது..இந்த சூழ்நிலையை ஏன் கெடுத்துக் கொள்ளவேண்டும்..பிறகு கேட்கலாமா? ..ஏன் கேட்க வேண்டும்..தெரிகிறபோது தெரியட்டுமே..ச்சே! இதுஎன்ன வேதனை..//
ReplyDeleteஆஹா ! மிதுவின் மன தடுமாற்றத்தையும் புரிந்து கொள்ள முடிகிறதே ...............
மிக சிறப்பான உரையாடல்கள்...............
ReplyDeleteஇருவரும் பேசுவதை எத்தனை கேட்டாலும் திகட்ட போவதில்லை
மிதுவுக்கு காதலை உணர்த்திய விதம் அவள் உணர்ந்த விதம் ,
இதை சொல்ல பட்ட விதம் எல்லாமே சுவையாக ரசிக்கும் விதத்தில் அமைந்து இருக்கின்றன
Thanks Priyaka, ungaloda sernthu naanum neenga quote panni rasicha lines-a rasithu padikiren. :)
ReplyDelete"தெரிந்தவர்களுக்கு சொல்லத் தேவையில்லை. தெரியாதவர்களுக்கு சொல்லி பிரயோஜனம் இல்லை"
ReplyDeleteWowwwww i have read this chapter several times.
Loved this chapter...u r really gr8 thena..
ReplyDeleteThanks anonymous and Priya!
ReplyDeleteVery romantic thenu.
ReplyDeleteNice story equal to actor vikram king film
ReplyDeletemidhunavin kadhal ....azhagaga sollapatuladhu....love that part so much
ReplyDelete