இருள் மறைத்த நிழல் (தேனு) - 21 அந்த வாரக்கடைசியில் அவள் எதிர்பார்த்தது போலவே, சந்தானம் தாத்தாவிடமிருந்து போன் வந்தது. வழக்கத்திற்கு மாறாக ரொம்ப நேரம் மிதுனாவோடு உரையாடினார். அன்று மாலையே காசிக்கு கிளம்புகிறார்களாம். 'சுபம்' டிராவல்சின் 'பாக்கேஜ் டூர்' என்பதாலும், அவர் நண்பர் சுகவனமும் இன்னும் சில குடும்பங்களும் வருவதாலும், கவலை வேண்டாம் என்று தைரியம் சொன்னார். ஆனால் தைரியம் அவர் குரலில் இருந்ததாக தெரியவில்லை அவளுக்கு. முன்னிலும் சோர்வாக ஒலித்தது அவர் குரல். கண்கள் பனிக்க போனிலேயே விடைகொடுத்தாள் மிதுனா. பேச்சு முடியும் தருவாயில், சுந்தரம் தாத்தாவிடம் பேச வேண்டும் என்றார் அவர். பிரிவுபச்சார பேச்சு என்பதாலோ என்னவோ, அவளைத் தனியே அறையில் விட்டுவிட்டு சிட் அவுட்டில் நளந்தனும் சுந்தரமும் காத்திருந்தனர். கண்ணை மறைத்த நீரை சுண்டிவிட்டபடி அவர்களைத் தேடி அங்கே வந்தவள், சுந்தரம், "என்னம்மா?" என்று கனிவாகக் கேட்கவும், தொண்டை அடைக்க, "தாத்தா உங்களோடு பேச வேண்டுமாம்" என்றாள். "இதோ!" என்றபடி விரைந்தோடினார் சுந்தரம். ஒரு கலக்கத்துடனே அவர் சென்ற திசையைப் ...
The content and images of the site are intellectual property of Thenu Tamil and should not be used without permission.
Copyright © 2007 Thenu Tamil, All Rights Reserved.