Skip to main content

Posts

Showing posts from 2010

The Author Speaks..

Subscribe to the Audio story on YouTube Channel Thenulagam https://www.youtube.com/@thenulagam    Feb 14th 2010 உங்களுக்கு ரமணிசந்திரன் நாவல்கள் பிடிக்குமானால் நிச்சயமாக இந்த கதையும் பிடிக்கும். Just in time, for the Valentines Day!  ரமணிசந்திரன்  அம்மாவின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.  எனக்கு பிடித்த எழுத்தாளர்கள் பட்டியல் சுஜாதா, சிவசங்கரி, லக்ஷ்மி, பாலகுமாரன், கல்கி, அகிலன், ராஜேஷ்குமார், அனுராதாரமணன் என வளர்ந்து கொண்டே போகும். அது முடிவற்றது. ஆனால் ஒரு காலகட்டத்தில் எனது ஆர்வம் ரமணிசந்திரன் நாவல்களில் நங்கூரமிட்டுவிட்டது.   எல்லாம் சரி... இப்படிப்பட்ட தீவிர வாசகி திடீரென்று எப்படி ஒரு அமெச்சூர் எழுத்தாளரானாளாம்? அது ஒரு எதிர்பாராத திருப்பம்.  என்னிடம் ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் நூல் வடிவில் உள்ளன. படித்து முடித்த கதைகள் தான் என்றாலும் மீண்டும் மீண்டும் அவற்றை படிப்பதை கண்ட என் கணவர் என் அமைதியற்ற தன்மையைப் பார்த்து சிரித்தார். "அதான் ரமணிசந்திரன் கதைகள் எல்லாம் ஒரு வகையான  கட்டமைப்புலே இருக்கும்னு சொல்றியே..  ...

இருள் மறைத்த நிழல் (தேனு) - 21

இருள் மறைத்த நிழல் (தேனு) - 21 அந்த வாரக்கடைசியில் அவள் எதிர்பார்த்தது போலவே, சந்தானம் தாத்தாவிடமிருந்து போன் வந்தது. வழக்கத்திற்கு மாறாக ரொம்ப நேரம் மிதுனாவோடு உரையாடினார். அன்று மாலையே காசிக்கு கிளம்புகிறார்களாம். 'சுபம்' டிராவல்சின் 'பாக்கேஜ் டூர்'  என்பதாலும், அவர் நண்பர் சுகவனமும் இன்னும் சில குடும்பங்களும் வருவதாலும், கவலை வேண்டாம் என்று தைரியம் சொன்னார். ஆனால் தைரியம் அவர் குரலில் இருந்ததாக தெரியவில்லை அவளுக்கு. முன்னிலும் சோர்வாக ஒலித்தது அவர் குரல். கண்கள் பனிக்க போனிலேயே விடைகொடுத்தாள் மிதுனா. பேச்சு முடியும் தருவாயில், சுந்தரம் தாத்தாவிடம் பேச வேண்டும் என்றார் அவர். பிரிவுபச்சார பேச்சு என்பதாலோ என்னவோ, அவளைத் தனியே அறையில் விட்டுவிட்டு சிட் அவுட்டில் நளந்தனும் சுந்தரமும் காத்திருந்தனர். கண்ணை மறைத்த நீரை சுண்டிவிட்டபடி அவர்களைத் தேடி அங்கே வந்தவள், சுந்தரம், "என்னம்மா?" என்று கனிவாகக் கேட்கவும், தொண்டை அடைக்க, "தாத்தா உங்களோடு பேச வேண்டுமாம்" என்றாள். "இதோ!" என்றபடி விரைந்தோடினார் சுந்தரம். ஒரு கலக்கத்துடனே அவர் சென்ற திசையைப் ...

இருள் மறைத்த நிழல் (தேனு) - 22

இருள் மறைத்த நிழல் (தேனு) - 22 எதிர்பாராதவிதமாக ஆந்திராவில் ஓரிரு நாட்கள் அதிகம் தங்க நேர்ந்தாலும், முடிந்தவரை சீக்கிரமாகவே ஊர் திரும்பினான் நளந்தன். ஈரக் கூந்தலுடன் பூஜைக்கு செவ்வரளிப்பூக்களைச் செடிக்கு வலிக்காமல் மெல்லப் பறித்துக் கொண்டிருந்த மிதுனா, அவனுக்கென்றே தைத்தார் போன்று இருந்த வெள்ளை பனியனும், அரைக்கால் சட்டையுமாக 'ஜாகிங்' முடித்து அவளை நோக்கி வந்த நளந்தனைப் பார்த்ததும் அகமும் முகமும் ஒரு சேர மலர்ந்தாள். தேடி அலைந்த ஒன்று கைவரப் பெற்ற நிம்மதி நெஞ்சுக்குள். பதிலுக்கு மோகனமாய் புன்னகைத்தான் நளந்தன். ஏதோ டியூடரிங்  செய்கையில் நிம்மதி பெற்று மனம் ஒருமுகப்பட்டதாக நினைத்தாளே.. அவனைக் கண்டதும், அவன் முறுவலை ஏற்றதும்,  ஏற்பட்ட உணர்வு.. அதுதான் அமைதி, நிம்மதி எல்லாம் என்றது! என்ன விசை வைத்திருக்கிறான் அந்த புன்னகையில்?! வெகு அக்கறையாக நல விசாரணை செய்தான். அவனாவது தாத்தாவின் பயண விவரம் தருவானோ என்று நப்பாசைத் தோன்றியது. கூடவே நேற்றிரவு தான் ஊரில் இருந்து திரும்பி இருப்பான். அதற்குள் இவள் தாத்தாவின் பயண விவரம் பற்றி அவனுக்கு என்ன, எப்படி தெரிய வாய...

இருள் மறைத்த நிழல் (தேனு) - 23

இருள் மறைத்த நிழல் (தேனு) - 23 அன்று தோட்டத்தில் உலவ மனமுமில்லை நேரமுமில்லை. டியூடரிங்கில் ஒரு மாணவனுக்கு 'Integral Calculus' மாதிரித் தேர்வு விடைத் தாள் திருத்தி, அவன் தவறாக விடையளித்த கேள்வி-பதில் பகுதிகளை அவனுக்குத் தெளிவாக விளக்க வேண்டியிருந்தது. இரு தினங்களாக அவள் கண்ணில் படாததை கண்ணுற்ற நளந்தன் அவளறைக்கே அவளைத் தேடி வரும்படியும் ஆனது. கதவைத் தட்டி அவள் குரலுக்குக் காத்திருந்தவன் அவளிடம் பதிலேதும் வராததால் எட்டிப் பார்த்தான். மும்முரமாக கணினியில் அந்த மாணவனின் கடைசி கேள்விக்கான பதிலையும் விளக்கத்தையும் முடித்த மிதுனா அப்போதுதான் நிமிர்ந்தாள். கம்ப்யூட்டரில் அவள் ஏதோ வேலை செய்வதைக் கண்டவன் பட்டவர்த்தனமாக தன் ஆச்சர்யத்தைக் காட்டினான். " கம்ப்யூட்டரில்  என்ன செய்கிறாய்? குட்! எடமலைப் புதூரில் கூட கம்ப்யூட்டர் நுழைந்துவிட்டதா? " என்று வியப்பு மேலிட மெய்யான மகிழ்ச்சி காட்டினான். அவன் நல்லவிதமாகத்தான் சொன்னான். ஆனால் அவளுக்குத் தான் ரோஷம் பொங்கிவிட்டது. அன்றும் காரில் செல்கையில், 'எடமலைப் புதூர்' என்றதும் அப்படித்தானே "ஓ!" என்றான்! "எ...

இருள் மறைத்த நிழல் (தேனு) - 24

இருள் மறைத்த நிழல் (தேனு) - 24 நளந்தனிடமிருந்து விலகி நிற்க முடிவெடுத்த மிதுனாவால் அடுத்து வந்த தினங்களில், அதை நிறைவேற்றத்தான் முடியாது போயிற்று. அவள் மட்டும் நினைத்தால் போதுமா? ஒரு கை ஓசை எழுப்புமா? அவளைத் தேடித் தேடி வந்து பேச நளந்தன் கங்கணம் கட்டிக் கொண்டு நின்றால், அவள் தீர்மானம் தண்ணீரில் எழுத்தாகாமல் வேறு என்ன செய்யும்?! அவனை வேண்டுமென்றே மிதுனா தவிர்ப்பதை நளந்தன் கண்டுகொண்டானோ அல்லது நிஜமாகவே சேதி சொல்லத்தான் வந்தானோ..அவளுக்குத் தெரியாது. ஆனால் அவள் அறை தேடி வந்து சுகுணாவும் அவரது இரண்டாவது மகன் சுகிர்தனும் நாளை மறுநாள் வீட்டிற்கு வரப் போவதாக தெரிவித்தான். சுகிர்தன் ஒரு ரேடியாலஜிஸ்ட், இங்கும் ஒரு lab நிறுவ இடம், equipments என்று வாங்க, பார்க்க வருவதாகவும், அப்படியே தாத்தாவைப் பார்த்துப் போக அவன் தாயார் சுகுணாவும் சேர்ந்து வருவதாகவும் தெரிவித்தான். ஒரு பத்து நாளேனும் தங்குவார்களாம். யார் வந்தால் அவளுக்கு என்ன? அவன் வீடு, அவன் மக்கள். தலையை வெறுமனே ஆட்டி வைத்தாள் மிதுனா. என்னவோ அவனிடம் நின்று பேசுவது முள் மேல் நிற்பது போல தவிப்பாக இருந்தது. ஏன் என்றும் புரியவி...

இருள் மறைத்த நிழல் (தேனு) - 25

               இருள் மறைத்த நிழல் (தேனு) - 25 பேசிக் கொண்டே வந்ததாலோ, வானம் இருட்டியிருந்ததாலோ அந்தப் பெண்ணை அவர்கள் கவனிக்கவில்லை. அவர்களைப் பிடிக்க அவள் ஓடித்தான் வந்திருக்கவேண்டும். நடையில் ஒரு அவசரத்துடன் மிதுனாவைத் தாண்டி, நளந்தனைத்  தோள் தொட்டுத் திருப்பிய அந்தப் பெண் வெகு இயல்பாக அவனை ஒரு தரம் அணைத்தாள். கட்டியணைத்தது பத்தாதென்று, அவன் கன்னத்தில் ஒரு முத்தம் வேறு பதித்தாள்! மேல்மட்டத்தில் இதெல்லாம் சகஜம் போலும். ஆகாயத்தில் உயரப் பரந்த விமானம் திடுதிப்பென்று தரையில் மோதியது போன்று உணர்ந்தாள் மிதுனா. "என்ன விஜ்ஜி, ஒரு மாதமாக ஆளையேக் காணோம்?! உங்களைப் பிடிக்கவே முடியவில்லையே! நல்லவேளை இன்று உங்களைப் பார்த்தேன்" என்று மிளிற்றியவள், "உங்களால் தான் இப்படி மாட்டிக் கொண்டேன், விஜ்ஜி" என்று புதிர் போட்டாள். அவனால் மாட்டிக் கொண்டாளாமா? அவளை அங்கு வர சொல்லிவிட்டு வர சொன்னதை மறந்துவிட்டானோ?! நளந்தனை மிதுனா பார்க்க, அவனோ அதே குழப்பத்தோடு அந்த பெண்ணைப் பார்த்தான். "என்னாலா?!" "ஆமாம்! நீங்கள் தானே அன்று வீட்டிற...

இருள் மறைத்த நிழல் (தேனு) - 26

           இருள் மறைத்த நிழல் (தேனு) - 26 வீட்டை அடைந்ததும், தப்பித்தோம் பிழைத்தோம் என்று தன் அறைக்கு ஓடத்தான் மிதுனாவுக்கு விருப்பம். ஆனாலும் ஒரு மரியாதைக்காக அந்த பெண்ணும் இறங்கி வர தாமதித்தாள். மூவருமாக உள்ளே செல்ல, நளந்தன் தாத்தாவின் அறை நோக்கி நடந்தான். அவனை ஒட்டிக் கொண்டு அந்த பெண். ஓரடி விட்டு மிதுனாவும் பின்தொடர்ந்தாள். உள்ளே சென்ற நளந்தன், "மிதுனா, இவள் சுபலா, என்.." என்று அறிமுகம் செய்ய முற்பட, அந்த சுபலா அவனை மேற்கொண்டு பேச விடவில்லை. என்னவோ அவனது அறிமுகவுரையைத் தடுப்பது போல, அவசர அவசரமாக இடையிட்டு, "ஹலோ, நான் சுபலா, நீங்கள் மிதுனா. இது விஜய், அது என் தாத்தா. சரி தானா விஜ்ஜி?" என்று பெரிய ஜோக் போல விழுந்து விழுந்து சிரித்தாள். மிதுனாவிடம் சம்பிரதாயமாக அவன் பேசுவது கூட இந்த சுபலாவிற்கு பொறுக்கவில்லையா? ஏன் அப்படி குறுக்கிடவேண்டும்? 'இவள் சுபலா, என்..' என்று ஏதோ சொல்ல வந்தானே..அவளை என்னவென்று அறிமுகம் செய்திருப்பான்? என் காதலி என்றா? பெரும்பாடுபட்டு அவளும் உதட்டை இழுத்துப் பிடித்து சிரித்து வைத்தாள். சுபலா வழக்கம் போல சலசல...

இருள் மறைத்த நிழல் (தேனு) - 27

   இருள் மறைத்த நிழல் (தேனு) - 27 அடுத்த நாள் நளந்தன் அதிகாலையிலேயே அலுவலகம் சென்றுவிட்டான். அதனால் அவன் பார்வையில் படாமல் ஓடவேண்டிய கஷ்டம் மிதுனாவுக்கு இல்லை. அந்த கஷ்டம் மட்டும் தான் இல்லை! மற்றபடி சுபலாவின் பேச்சு மனதை உறுத்திக் கொண்டுதான் இருந்தது. நல்லவேளை, சுகுனாம்மா அடுத்த நாள் வருவதாக இருந்ததால், அவர்கள் தங்க அறை ஒதுக்குவது, சமையல்காரருக்கு, அடுத்த நாள் விருந்துக்கு மெனு சொல்வது, தாத்தாவிற்கு பணிவிடை என்று ஒன்றன்பின் ஒன்றாக அன்று நாள் முழுக்க வேலை வர மேலும் அல்லாட மனதிற்கு நேரமின்றிப் போனது. தாத்தா சொன்னது போலவே, சுகுனாம்மா லட்சுமி கடாட்சம் போல அம்சமாக இருந்தார்கள். சிரித்த முகம். நல்ல குணம். வேற்று ஆள் போல அவர்களும் நடந்துகொள்ளவில்லை, அவளையும் நடத்தவில்லை. சுகிர்தனும் சகஜமாகவேப் பழகினான். அதிலும் நளந்தனிடம் ரொம்பவே நெருக்கம் போலும். இருவரும் சகோதரர்கள் போல ஒட்டித் திரிந்தனர். பார்க்க கூட சம வயதும், ஒத்த உடல் வாகுமாகத் தான் இருந்தனர். என்ன ஒரு வித்தியாசம் என்றால், நளந்தனிடம் எப்போதும் பேச்சில் ஒரு நிதானம், செயல...

இருள் மறைத்த நிழல் (தேனு) - 28

     இருள் மறைத்த நிழல் (தேனு) - 28 மறுநாள் மதிய உணவின் போது வேறு வகையில் மறுபடியும் அவன் கோபத்திற்கு ஆளானாள். அன்று நளந்தன் பரம்பராவில் வற்புறுத்தி வாங்கித் தந்த ஒரு சுடிதாரை அணிந்திருந்தாள். அந்த உடை அவளுக்கு ரொம்பவும் பிடித்தமானது. நளந்தனின் தேர்வு என்பது ஒரு முக்கிய காரணம். அடிப்பது போல அல்லாமல், அழகான மஞ்சளும் சிறிது ஆரஞ்சும் கலந்த..பட்டுப் புடவைகளில் வரும் மங்களகரமான மாம்பழ மஞ்சள் நிறம். கழுத்தைச் சுற்றி மிக நுண்ணிய வேலைப்பாடு. அதைத் தொடர்ந்து முன் பக்கம் நெஞ்சுவரை வெகு அழகாக கற்கள் பதித்து அலங்கரிக்கப்பட்ட 'யோக்' வேலைப்பாடு. அவள் இடையை லேசாக  இறுக்கிப் பிடித்து முழங்காலுக்கு சற்று மேலாக முடிந்த அந்த சுரிதார், அவளுக்கே தைத்தார் போல வெகு கச்சிதமாக பொருந்தியது. கொடி போன்ற அவள் உடல்வாகிற்கு ஏற்ற தையல் அமைப்பு. அன்று வரை அவளை சேலையிலேயே பார்த்திருந்த சுகுனம்மா வியந்து மெச்சுதலாக  பார்த்து, "நீ சேலை மட்டும் தான் கட்டுவாய் என்று நினைத்தேன்" என்றார். சுகிர்தனோ வெளிப்படையாக, "வாவ்" என்றான் வைத்த கண் வாங்காமல்...

இருள் மறைத்த நிழல் (தேனு) - 29

   இருள் மறைத்த நிழல் (தேனு) - 29 அன்று முதல் ஒரு கவனத்தோடு நடந்துகொண்டாள் மிதுனா. சுகிர்தனிடம் பேசும் சந்தர்ப்பங்களை குறைத்துக் கொண்டாள். நளந்தனுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ..அதற்காக என்றில்லை..அவளுக்கேப் பிடிக்கவில்லை. சுகிர்தன் நல்லவன் தான். பண்பானவனும் கூட. ஆனால் அவனிடம் மனம் ஒட்டாத போது, அவன் மனதில் வீண் ஆசைகளை கிளப்பிவிடுவது ..அதிலும் தெரிந்தே கிளப்பிவிடுவது மகா பாவமில்லையா?! சுகிர்தனை தவிர்ப்பது அப்படியொன்றும் முடியாத காரியமாகவும் இல்லை. அவன் வீட்டில் இருந்தால் தானே அந்த கஷ்டம்?! என்னவோ நளந்தன் அவனைக் கூட்டிக் கொண்டு அப்படி வெளியே சுற்றினான்! உணவு கூட காலை சிற்றுண்டி தவிர பிற வேளைகளில் வெளியிலேயே முடித்துக் கொண்டனர். காலை உணவை மிதுனா தாமதமாக எழுந்துவிட்டது போல..அல்லது பசியில்லை என்று தவிர்த்துவிடுவாள். இளைஞர்கள் இருவரும் அதிகாலையில் கிளம்பிவிடுவதால், சுகுனம்மாவும் சில தினங்களுக்கு பிறகு மிதுனா எழும் வேளையிலேயே எழுந்து அவளோடு உணவுண்டார். மாலை அவர்கள் சீக்கிரம் வந்துவிட்டாலோ இவள் கோவிலுக்கு கிளம்பிவிடுவாள். சுகுனம்மாவுக்கு கோயில் ...

இருள் மறைத்த நிழல் (தேனு) - 30

இருள் மறைத்த நிழல் (தேனு) - 30 தலை வலி, தாத்தாவிற்கு துணை, டியூடரிங் என்று எந்த சாக்கையும் அவன் ஒத்துக்கொள்ளவில்லை. அதுஅதற்கு ஒரு பதில் வைத்திருந்தான். போக வில்லை என்றால் அத்தை வருத்தப்படுவார்கள் என்று அவன் அவ்வளவு சொன்ன பிறகு அவளால் மென்மேலும் மறுக்க முடியவில்லை. நேரே சுகிர்தன் வாங்கிய இடத்திற்கு தான் அழைத்துச்சென்றான். 2 கிரவுண்ட் நிலம். அங்கே சுகிர்தன் மட்டும் யாரோ ஒரு ஆளுடன் மும்முரமாக  நிலத்தைக் காட்டி என்னவோ பேசிக் கொண்டிருந்தான். இவர்களைப் பார்த்தவுடன் கையாட்டினான். ஐயோ..இங்கே சுகிர்தனோடு இவளை தனியே விட்டு நளந்தன் தன் 'கமிட்மென்ட்'டை பார்க்க சென்றுவிடுவானே.. சுகுனம்மாவையும் காணவில்லை என்று மிதுனா கலக்கமுற்றாள். ஆனால் அதற்கு அவசியமே இல்லாதது போல நளந்தன் அங்கிருந்து நகரவில்லை! அங்கே பேசிக் கொண்டிருந்தவர் சுகிர்தனின் சொந்தக்காரர் தானாம். அவர்கள்  வீடு அருகில் இருப்பதால் ரிஜிஸ்டிரேஷன் முடிந்ததும் மதியமே நிலத்தை ஒரு எட்டு வந்து பார்த்துவிட்டு, அவர்கள் வீட்டிற்கு சுகுனம்மாவும் சுகிர்தனும் சென்றனராம். ரொம்ப நாள் கழித்து ...

இருள் மறைத்த நிழல் (தேனு) - 31

இருள் மறைத்த நிழல் (தேனு) - 31 நளந்தன் காரில் மிதுனா ஏறிக் கொண்டாள். காரை மிதமான வேகத்தில் செலுத்தினான் நளந்தன். காரில் ஒரு நிசப்தம் நிலவியது. நளந்தன் எப்போதுமே அளவாகத்தான் பேசுவான் என்பதால் அந்த மௌனம் மிதுனாவுக்கு வித்தியாசமாக இல்லை. இன்னும் சொல்லப் போனால் இப்படி இருவரும் பேசாது தத்தம் சிந்தனையில் ஆழ்ந்து வருவதே அவளின் அப்போதைய மனநிலைக்கு பிடித்தமாய் இருந்தது. அவனோடு பயணிக்கும் இந்த பயணம் ஏன் இப்படி இதமாக இருக்கிறது?.. இன்று இந்த பயணத்தை தவிர்க்க அவள் ஒற்றைக் காலில் முயன்றதென்ன.. இப்போது இதே பயணத்தை ரசித்து, இன்னும் கொஞ்ச நேரம் இது நீண்டால் என்ன என்று ஏங்குவதுதான் என்ன! நினைத்தாளா இன்று நளந்தன் வந்து அவளை அழைத்துப் போவான் என்று..? அல்லது வீட்டிற்கு திரும்பி செல்கையில் கூட வருவான் என்று தான் நினைத்தாளா?! அவள் சிந்தனையைக் கிழித்தபடி நளந்தனின் செல் அலறியது. 'Handsfree Mode' - ல் செல்-ஐ வைத்திருந்தான் அவன். பட்டனைத் தட்டியதும், "ஹாய் விஜ்ஜி!" என்று நாராசமாக ஒலித்தது சுபலாவின் குரல்! மிதுனாவிடம் ஒரு பார்வையை வீசியவன், "ஐ வில் கால் யூ இன் எ...