Skip to main content

Posts

இருள் மறைத்த நிழல் (தேனு) - Full Novel

   Subscribe to the Audio Novels on YouTube Channel Thenulagam https://www.youtube.com/@thenulagam    Feb 14th 2010 - The Author Speaks உங்களுக்கு ரமணிசந்திரன் நாவல்கள் பிடிக்குமானால் நிச்சயமாக இந்த கதையும் பிடிக்கும். Just in time, for the Valentines Day!  ரமணிசந்திரன்  அம்மாவின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.  எனக்கு பிடித்த எழுத்தாளர்கள் பட்டியல் சுஜாதா, சிவசங்கரி, லக்ஷ்மி, பாலகுமாரன், கல்கி, அகிலன், ராஜேஷ்குமார், அனுராதாரமணன் என வளர்ந்து கொண்டே போகும். அது முடிவற்றது. ஆனால் ஒரு காலகட்டத்தில் எனது ஆர்வம் ரமணிசந்திரன் நாவல்களில் நங்கூரமிட்டுவிட்டது.   எல்லாம் சரி... இப்படிப்பட்ட தீவிர வாசகி திடீரென்று எப்படி ஒரு அமெச்சூர் எழுத்தாளரானாளாம்? அது ஒரு எதிர்பாராத திருப்பம்.  என்னிடம் ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் நூல் வடிவில் உள்ளன. படித்து முடித்த கதைகள் தான் என்றாலும் மீண்டும் மீண்டும் அவற்றை படிப்பதை கண்ட என் கணவர் என் அமைதியற்ற தன்மையைப் பார்த்து சிரித்தார். "அதான் ரமணிசந்திரன் கதைகள் எல்லாம் ஒரு வகையான  கட்டமைப்புல...

இருள் மறைத்த நிழல் (தேனு) - Irul Maraitha Nizhal (by Thenu)

"இந்த கதையை திருடி திருடி போடறாங்க அக்கா. Author நீங்க னு சொல்லி சண்டை போட்டு போட்டு சலிச்சி போச்சு. உங்க blog ல மறுபடியும் போடுங்க, அக்கா. அப்போ தான் உங்களோடதுனு establish ஆகும்."-னு என் சனா (Sana Sana) தங்கச்சி ரொம்ப நாளா சொல்லும். Finally doing it. எனது முதல் கதையான இருள் மறைத்த நிழல் தொடரை rerun செய்யப் போகிறேன். சமீப காலமா என் கதைகளை thenunovels.blogspot.com ல தான் பதிவிடுவது வழக்கம். இந்த கதையை மட்டும் thenuwrites.blogspot.com ல வெளியாடலாம்னு இருக்கேன். ஏன்னா அங்கே தான் இந்த கதையை முதன் முதலில் பதிவிட்டேன். 2010 தொட்டு பல வருடம் பல வாசகர்கள் அங்கே கமெண்ட்ஸ் போட்டிருக்காங்க. இந்த கதையை நான் தான் எழுதினேன் என்று copyrights claim செய்ய அதுவும் ஒரு ஆதாரம். அதனாலே இந்த கதையை மட்டும் அந்த original blogல இருந்து புதிய தளத்திற்கு மாற்றவில்லை. கதை rerun அங்கேயே நடக்கும். Links ஐ whatsapp குரூப் மற்றும் thenunovels blog ல பதிவிடறேன். கதை blog ல வெளியாகும் சமயம், Amazon policy padi, Kindle Unlimited ல இருந்து ரிமூவ் செய்து விடுவேன். அதனால் Free deals இருக்காது. அதுவரை வாராவார...

The Author Speaks..

Subscribe to the Audio story on YouTube Channel Thenulagam https://www.youtube.com/@thenulagam    Feb 14th 2010 உங்களுக்கு ரமணிசந்திரன் நாவல்கள் பிடிக்குமானால் நிச்சயமாக இந்த கதையும் பிடிக்கும். Just in time, for the Valentines Day!  ரமணிசந்திரன்  அம்மாவின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.  எனக்கு பிடித்த எழுத்தாளர்கள் பட்டியல் சுஜாதா, சிவசங்கரி, லக்ஷ்மி, பாலகுமாரன், கல்கி, அகிலன், ராஜேஷ்குமார், அனுராதாரமணன் என வளர்ந்து கொண்டே போகும். அது முடிவற்றது. ஆனால் ஒரு காலகட்டத்தில் எனது ஆர்வம் ரமணிசந்திரன் நாவல்களில் நங்கூரமிட்டுவிட்டது.   எல்லாம் சரி... இப்படிப்பட்ட தீவிர வாசகி திடீரென்று எப்படி ஒரு அமெச்சூர் எழுத்தாளரானாளாம்? அது ஒரு எதிர்பாராத திருப்பம்.  என்னிடம் ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் நூல் வடிவில் உள்ளன. படித்து முடித்த கதைகள் தான் என்றாலும் மீண்டும் மீண்டும் அவற்றை படிப்பதை கண்ட என் கணவர் என் அமைதியற்ற தன்மையைப் பார்த்து சிரித்தார். "அதான் ரமணிசந்திரன் கதைகள் எல்லாம் ஒரு வகையான  கட்டமைப்புலே இருக்கும்னு சொல்றியே..  ...

இருள் மறைத்த நிழல் (தேனு) - 36

இருள் மறைத்த நிழல் (தேனு) - 36 முட்டாளின் சொர்க்கம்  , திரிசங்கு சொர்க்கம் என்பது எல்லாம் போய், திக்கு தெரியாத காட்டில் அல்லவா மாட்டிக் கொண்டாள் மிதுனா! இப்படி சொல்லாமல் கொள்ளாமல் சிதறியதே அவள் உலகம்! தன் மனதை அவனிடம் சொல்லவும் முடியாது, உள்ளே போட்டு பூட்டவும் முடியாது.. இந்த உயிர் வாதை தாங்க முடியாது மனம் தவித்தது. ஒரு புறம், இந்த துன்பமெல்லாம் நளந்தன் தன்னை காதலிக்காததால் மட்டும் வந்ததா அன்றி சுபலாவை காதலிப்பதால் வந்ததா என்றும் குழப்பமாக இருந்தது..  அவன் விருப்பம் சுபலாவிடம்  என்றால், என் விருப்பம் அவனோடு..அதுவும் என்னோடு. இதை யாரிடமும் நான் சொல்ல வேண்டியதும் இல்லை; என் நேசத்தைக் கிள்ளி எறிய வேண்டியதும் இல்லை என்று தனக்குள் திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டாள். ஆனாலும், ஏனோ சுபலாவையும் நளந்தனையும் இணைத்துப் பார்க்க மனம் கேட்கவில்லை. என்ன மாய வலை விரித்தாள் இந்த ஜாலக்காரி சுபலா? என்று மனம் வெதும்ப, தன் எண்ணப் போக்கைக் கண்டு தானே முகமும் சுளித்தாள். என்ன இது, வலை, ஜாலம்  என்று நன்கறியாத ஒரு பெண்ணைப் பற்றி இகழ்வா...

இருள் மறைத்த நிழல் (தேனு) - 37

இருள் மறைத்த நிழல் (தேனு) - 37 நளந்தன் ஆந்திரா சென்ற தினமே தாத்தா மிதுனாவை அழைத்து திருவிழா விவரம் சொன்னார். நளந்தன் ஏற்கெனவே கோடி காட்டியிருந்ததால் அவள் எதிர்பார்த்திருந்த பேச்சு தான். "நம் ஊர் திருவிழா வருகிற வாரம் வருகிறதம்மா. வருடாவருடம், பத்து நாள் ஊரே கோலாகலமாக இருக்கும்." என்றார். "இந்த மாதத்தில் என்ன திருவிழா தாத்தா..  பண்டிகை போலவும் தெரியவில்லையே" "நம் சொந்த ஊர் தெரியுமாம்மா? சடையக் கவுண்டன் பாளையம். அங்கே எங்கள் குலதெய்வம் செல்லியம்மனுக்கு தேர் திருவிழா. ஊரில் நம்முடையது தான் பெரிய குடும்பம். நாம் தான் முன்னின்று எல்லாம் செய்ய வேண்டும். நாளை மறுநாள் எல்லாரும் கிளம்ப வேண்டும். நம்மோடு இன்னும் சில நம் நகரத்து சொந்த பந்தம் எல்லாம் சேர்ந்து நம் டிராவல்ஸ் பஸ் ஒன்றிலேயே ஒன்றாக போய்விடலாம்." என்றார் உற்சாகமாக. வரவில்லை என்று சொல்லவும் வழியில்லை.. தனியே அவளை எங்கு விட்டு செல்வார்? விதியே என்று சுபலாவையும் சகித்து போய் தான் வரவேண்டும்..எப்படியும் நளந்தனை கண்ணால் காணும் வாய்ப்பு கூட தன் தாத்தா ஊர் திரும்பும் வரை தானே.. இந்த திருவிழா காலத்தில் தொழில், ...

இருள் மறைத்த நிழல் (தேனு) - 38

இருள் மறைத்த நிழல் (தேனு) - 38       மிதுனாவின் 'ஹலோவிற்கு' பதிலாக "சுந்தரம் சார் இருக்காருங்களா?" என்றது ஒரு பெண் குரல். "அவர் வெளியே போயிருக்கார். வரும் நேரம் தான். என்ன விஷயம் என்று சொல்லுங்கள் நான் வந்ததும் சொல்லிவிடுகிறேன்" என்றாள் மிதுனா. சற்று தயங்கிய அந்த பெண், "இல்லைங்க.. இது வாராவாரம் நாங்கள் செய்யும் கால் தான். சுகம் ஹாஸ்பிடல்லில்  இருந்து கூப்பிட்டதாக சொல்லுங்க போதும்.. முக்கியமான விஷயம்.. மறந்துடாதீங்க.. நிறைய  தடவை டிரை செய்து இப்போ தான் லைன் கிடைத்தது. எதற்கும் அவரையே கூப்பிட சொல்லுங்களேன்.. எனக்கு மறுபடியும் லைன் கிடைக்குமா என்று தெரியவில்லை..இங்கே ஹாஸ்பிடல்லிலும்  நிறைய கூட்டம்.. " என்றாள். சுகம் மருத்துவமனை என்றால்.. சுகவனம் சாருடையது.. முக்கியம் என்று வேறு சொல்கிறாளே.. மிதுனா வற்புறுத்தினாள். "முக்கியம் என்று வேறு சொல்கிறீர்கள்.. இந்த கிராமத்தில் சிக்னல் எப்போது எடுக்கும் எடுக்காது என்றும் சொல்ல முடியாது..  விவரம் சொன்னீர்கள் என்றால் நானே தெரிவித்துவிடுவேன்" "வந்து.. சுந்தரம் சார் கிட்டே தான் எதுவும் சொல்ல வேண்...

இருள் மறைத்த நிழல் (தேனு) - 39

இருள் மறைத்த நிழல் (தேனு) - 39   நளந்தனை தவிர்க்க வேண்டும் என்பதொன்றே குறியாக அடுத்த அறையை திறந்து உள்புகுந்தாள் மிதுனா. வந்த வேகத்தில் அறையுள் ஒருவன் இருந்ததை அவள் கவனிக்கவேயில்லை. அரையிருள் வேறு. உள்ளே வந்த பின்னும் நளந்தன் பொய் சொன்னான் என்பது தான் மனம் முழுதும் கசந்து வழிந்தது. தாத்தா அங்கே அநாதை போல் இருக்க இவனும் ஒரு காரணம் என்று குமைந்தபடி நெஞ்சை அழுத்திக் கொண்டு அழுதவள், தன்னிலை சுதாரித்து மின் விளக்கை எரிய விட்டால்.. அங்கே வெறிகொண்ட நாய் போல பத்ரி! இவன் எப்படி இங்கே? பூட்டிய அறையினுள்? இவன் கடைத் தெருவிற்கு செல்வதாக சுபலா சொன்னாளே.. அது பொய்யா? அல்லது அவள் கண்ணிலும் மண்ணை தூவி இங்கே பதுங்கி இருந்தானா? குரலெடுத்து அலறப் போன மிதுனாவை தாவி வந்து வாய் பொத்தினான் பத்ரி. மிதுனா திமிர திமிர அவன் மேலும் மேலும் அவளை அருகில் இழுத்தான். அவள் கைகளை முதுகுக்கு பின் மடக்கி அவளை கட்டியணைக்க மூர்க்கமாக முயற்சித்தான். சில பல நிமிட போராட்டத்திற்கு பிறகு அவன் கையைக் கடித்து விடுபட்ட மிதுனா கட்டிலின் மறுபுறம் ஓடினாள். ஒரே எட்டில் கட்டிலைத் தாவி அவளைப் பிடித்தான் பத்ரி. மீ...